Saturday, June 13, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவள்ளுவருக்கு காவி உடையா ?கொதித்தெழும் தமிழினம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
18/01/2024
in இந்தியா, செய்திகள்
0
திருவள்ளுவருக்கு காவி உடையா ?கொதித்தெழும் தமிழினம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மீண்டும் மீண்டும் தனது சர்ச்சைக் கருத்துகளை சரந்தொடுத்து, தான் வகிக்கும் பொறுப்பை மீறி, முழுக்க முழுக்க ஓர் அரசியல் கட்சியின் பரப்புரையாளர் போலவே செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று பெரும்பாலான தமிழ் மக்களின் பெருங்குரல் ஆதங்கத்தோடு ஒலிக்கின்றது.

ஒட்டுமொத்த மனித குலமே போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் தினத்தன்று, ஆளுநர் ஆர்.என்.ரவி, அய்யன் திருவள்ளுவருக்கு காவியுடை உடுத்தி, நெற்றியில் பட்டைத்தீட்டி காவிப்பிரசார ஒப்பனையோடு, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் இப்பிரசாரப் போக்கு, ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் உள்ளங்களை யெல்லாம் கொதிப்படையச் செய்துள்ளது. தனது சனாதனக் கொள்கை நிலைப்பாட்டை, அதன் ஆதரவுத் தீவிரப் போக்கை திருவள்ளுவர் மீது திணித்துத் திளைக்கும் ஆளுநரின் செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க எத்தனிக்கும் ஒட்டு மொத்த தமிழினத்தின் குரலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில், ”தமிழினத்தில் பிறந்து, அமிழ் தமிழில் அறம் உரைத்து, உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!” என்று பதிவிட்டுள்ளார்.

AlsoRead

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழர்களின் உணர்வை உரசிப் பார்க்கும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்து வருவது என்பது ஆரோக்கியமானதல்ல. உலக சரித்திரத்தில் இதுவரை அதிகாரப் பின்னணியோடு செலுத்திய அராஜகப் போக்குகளும் வரம்பு மீறிய வெறுப்பரசியலும் வென்றதாகவோ நின்று நிலைத்ததாகவோ எந்தத் தடயமும் இல்லை.

சிம்மாசனம் என்பதும் கிரீடம் என்பதும் நிலையானவை அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சியில் கழண்டு போகக்கூடியவை. மாற்றத்துக்குரியவை. இதனை நினைவில் நிறுத்தாமல், அதிகாரம் கையில் உள்ளது என்பதால், நெறிபிறழ்ந்து நடந்துகொள்வது நலம் பயக்காது.

தான் வகிக்கும் ஆளுநர் பதவி தனிப்பட்டவர்களின் அடையாளங்களை கட்டமைக்கவோ வரலாற்றை மாற்றிச்சொல்லும் விவசகாரங்களுக்கு பயன்படுத்தவோ கூடிய பதவி அல்ல என்பதையும் அந்த பதவியில் இருக்கும் வரை தான் ஒருபொது மனிதன் என்பதை ஆளுநர் உணராமல் இருப்வபது இந்திய அரசியலமைப்புக்கே எதிரான செயல் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

Tags: ஆளுநர்காவி உடைதமிழினம்திருவள்ளுவர்
Previous Post

மெரி கிறிஸ்துமஸ்

Next Post

கலைக்குழு நல சங்கம் தொடக்க விழா

Related Posts

Cheyyar River

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026
Cheyyar News

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
  • டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!
  • “நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved