Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சகல தோஷங்களையும் நீக்கி நல் வாழ்வு தரும் மேல்மலையனூர் அங்காளம்மன்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/01/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
சகல தோஷங்களையும் நீக்கி நல் வாழ்வு தரும் மேல்மலையனூர் அங்காளம்மன்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பராசக்தியால் உலகம் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெறுவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும் சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயிணியாக பிறந்தார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானை நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் கிடைக்கப்பெரும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

தட்சன் கைலாயம் சென்ற போது, சிவபெருமான் எழுந்து நின்று வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.

சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர், காளி, வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.

சிவன், எரிந்த தாக்ஷாயிணியின் உடலை எடுத்து உக்கிரத்தாண்டவம் ஆடினார். அப்போது தாக்ஷாயிணியின் உடல் பகுதிகள் பல்வேறு இடங்களில் சிதறி விழுந்தது. அப்போது வலது கை முதலில் விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்று கூறப்படுகிறது.

மேல்மலையனூரில் புற்றாக இருந்த அங்காள பரமேஸ்வரி, அங்கே வசிக்கும் மீனவர்களின் கனவில் வந்து, இங்கே புற்றில் பாம்பாக இருப்பதாகவும் தன்னை பூஜிக்குமாறு சொன்னதாக கூறப்படுகிறது. அதேபோல், அங்கே இருக்கும் மீனவர்களும் பூஜையிட்டு வழிபாடு செய்து வந்தனர்.

ஆச்சரியம் என்னவென்றால், அங்கே இருக்கும் ஒவ்வொரு மீனவர்கள் தன் பிரச்சினையை கூறி வேண்டுதல் வைக்கும்போது, அந்த பிரச்சினை நிவர்த்தி ஆனது. அதனால் தொடர்ந்து தேவியை வழிபட்டு வந்திருக்கிறார்கள். பிறகு தான் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக ஆனது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். அன்று இந்த கோயிலுக்கு வந்து ஊஞ்சில் இருக்கும் உற்சவர் அங்காளம்மனை தீபம் ஏற்றி வழிபட்டு, எலுமிச்சை பழத்தினார் திருஷ்டி சுற்றினால், ஏவல், பில்லி சூனியம், திருஷ்டி உள்பட சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேல்மலையனூரில் உள்ள மீனவ சமூக மக்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் மொத்தம் 7 வம்சாவழியை சார்ந்தவர்கள். ஆண்டொன்றுக்கு ஒரு வம்சாவழியை சார்ந்தவர்கள் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு ஏற்கின்றனர்.

Tags: அங்காள பரமேஸ்வரிசிவபெருமானுடன் திருமணம்நல் வாழ்வுபராசக்திமேல்மலையனூர் அங்காளம்மன்
Previous Post

செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கோலப் போட்டி

Next Post

பஸ் நிலைய 15 கடைகள் ஏலம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved