Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வீடு,மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு: ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும்! TNRERA

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
19/11/2024
in வர்த்தகம்
0
வீடு,மனை விற்பவருக்கு முக்கிய அறிவிப்பு: ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும்! TNRERA
0
SHARES
155
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் மனைகள் விற்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள். ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு தலா ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய உத்தரவு போட்டுள்ளது.

 ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5381 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவி‌ல் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை ஆணயத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், ரியல் எஸ்டேட்  புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. புதிய உத்தரவு படி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது அதுவும் ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ. 3 லட்சம் ரூபாய் வரை என பொதுவான கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

AlsoRead

‘இதயம்’ குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

உலகளாவிய போர் மேகங்கள்: இந்தியப் பங்குச் சந்தையில் 2,700 புள்ளிகள் வீழ்ச்சி

கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? பண மேலாண்மையில் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விதிகள்

இதற்கான நடைமுறைகளை மாற்ற ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு மற்றும் மனைகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் திருப்பூர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா ரூ. 12,000 அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர எல்லையில் வரும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், கடலூர், காஞ்சிபுரம், கரூர், சிவகாசி, கும்பகோணம், காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் தலா, ரூ10,000 அபராதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் நகராட்சிகளில் வீடு, மனை விற்றால் தலா, ரூ. 6,000, பேரூராட்சிகளில் தலா ரூ. 4,000, ஊராட்சிகளில் தலா, ரூ.3,000 என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் துறையின் வெப்சைட்டுக்கு சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளலாம்.அபராதத்தொகை விதிக்கும் போது மனைப்பிரிவு திட்டங்களின் அதன் மொத்த மதிப்பி‌ல் 2% அல்லது அடுக்குமாடி குடியிருப்பு என்றால் அதில் விற்கப்பட்ட வீடு மதிப்பில் 1% என இரண்டில் எது அதிகம் என்ற அடிப்படையில் அபராதத்தொகை முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags: TNRERAதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்ரியல் எஸ்டேட்ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்வர்த்தகம்
Previous Post

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 222 மனுக்கள் அளிப்பு!

Next Post

திருச்செந்தூர் கோயில் யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை!

Related Posts

VR Muthu

‘இதயம்’ குழுமத் தலைவர் வி.ஆர். முத்து காலமானார்

04/03/2026
Middle East War Impact on Stocks

உலகளாவிய போர் மேகங்கள்: இந்தியப் பங்குச் சந்தையில் 2,700 புள்ளிகள் வீழ்ச்சி

02/03/2026

கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? பண மேலாண்மையில் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விதிகள்

01/03/2026

கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவது எப்படி? – தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள்!

28/02/2026

2025-26ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.8 % வரை இருக்கும் : நிதி அமைச்சர் ஆய்வறிக்கை

31/01/2025

98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன: இந்திய ரிசர்வ் வங்கி

05/11/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved