மத்திய கிழக்கு நாடுகளில் ஈராக்-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய நிதிச் சந்தைகள் கடும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளன. அதன் நேரடிப் பாதிப்பாக இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத் தொடக்கத்திலேயே நிலைகுலைந்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால், இந்தியச் சந்தை இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
| குறியீடு | இறுதி நிலை | சரிவு (புள்ளிகள்) | சதவீத மாற்றம் |
| BSE சென்செக்ஸ் | 80,238.85 | 1,048.34 ↓ | -1.29% |
| NSE நிஃப்டி | 24,865.70 | 312.95 ↓ | -1.24% |
முக்கிய மாற்றங்கள்:
சந்தை வீழ்ச்சி: வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 2,743 புள்ளிகள் வரை சரிந்து பாதாளத்திற்குச் சென்றது. இருப்பினும், இறுதி நேரத்தில் ஓரளவிற்கு மீண்டு 1,048 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.
முதலீட்டாளர் இழப்பு: இன்றைய ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் கோடி வரை துடைத்தெறியப்பட்டது.
ரூபாய் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 91.47 ஆக சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சியைப் பதிவு செய்தது.
கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிசக்தித் துறை பாதிப்பு
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால், கச்சா எண்ணெய் விலை நிலையில்லாமல் உள்ளது. தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு $76.79 ஆக உள்ளது.
விளைவு: எரிபொருள் விலை உயரும் என்ற அச்சத்தால் ஏஷியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.
பாதுகாப்பான புகலிடமாக தங்கம் (Safe Haven)
பங்குச் சந்தை சரிவடையும் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கித் திரும்புகின்றனர்.
போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு கணிசமாக உயர்ந்துள்ளது, இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பில் சரிவு
அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியச் சந்தையிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் FII-கள் ரூ. 7,536 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
நிபுணர்களின் எச்சரிக்கை:
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர்ச் சூழல் குறுகிய காலத்திலேயே உலக பொருளாதாரத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வை சந்திக்கலாம் என்பதால், எரிசக்தி துறை மிகப்பெரிய அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.
போர் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், உலகளாவிய சந்தைகளில் எரிபொருள் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் போக்குவரத்து, உற்பத்தி, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் நேரடியாகப் பிரதிபலிக்கும். இதனால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், விநியோகச் சங்கிலி (Supply Chain) சீர்குலைவதும் கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. முக்கிய கடல் வர்த்தக வழிகள் பாதிக்கப்பட்டால், சர்வதேச வர்த்தகத்தில் தடைகள் உருவாகலாம். இது உலகளாவிய நிதி நிலையை மேலும் கடுமையாக்கும் சூழலை உருவாக்கும்.
மொத்தத்தில், மேற்கு ஆசியப் பதற்றம் நீடித்தால், அதன் விளைவுகள் எண்ணெய் சந்தையைத் தாண்டி உலக பொருளாதாரத்தின் பல அடுக்குகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முன்னணி பங்குகள் (Gainers & Losers):
நட்டம் அடைந்தவை: லார்சன் & டூப்ரோ (L&T) 5% க்கும் மேல் சரிந்தது. அதானி போர்ட்ஸ் (Adani Ports), ஏஷியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), மாருதி சுசூகி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தன.
லாபம் ஈட்டியவை: இவ்வளவு பெரிய சரிவிலும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் சன் பார்மா (Sun Pharma) ஆகிய பங்குகள் லாபத்தில் முடிந்தன.
நாளை (மார்ச் 3, 2026, செவ்வாய்க்கிழமை) ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு (BSE & NSE) விடுமுறை அளிக்கப்படுகிறது. வர்த்தகம் மீண்டும் புதன்கிழமை (மார்ச் 4) தொடங்கும்.



