Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது.

0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் மேற்கு பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான பாமகவினர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேரணியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகனிடம் மனு கொடுத்தனர்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

அந்த மனுவில் கடந்த 04.11.2024 அன்று கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் மற்றும் அரங்க தமிழ் ஒளி, செல்வராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாநில வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழியை குறிப்பிட்டு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் வன்னிய சமுதாய மக்களை தரக்குறைவாக விமர்சித்து பேசி இரு சமுதாய மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதியை கெடுத்து பொதுவெளியில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு இருசமுதாய மக்களிடையே சாதி கலவரம் ஏற்பட வாய்புள்ளது.  ஆகவே பொது அமைதியை கெடுத்து சமுக ஒற்றுமைக்கு எதிராகவும், வன்னியர் இன மக்களை தரம் தாழ்த்தி அதன் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சாதி மோதல்களை தூண்டும் உள் நோக்கத்துடன் பொது வெளியில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக் கொண்ட  துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து,  பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. முன்னதாக பாமகவினர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பாமகவினரை கைது செய்வதற்காக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் உறுதியளித்ததின் பெயரில் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags: கடலூர்கடலூர் மாவட்டம்
Previous Post

காற்றில் பறக்கும் மேடை நாகரீகம்!

Next Post

அமரன் திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கி பள்ளி மாணவர்களும் பார்க்க நடவடிக்கை:முதல்வருக்கு, செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved