Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்தியாவிலேயே முதல்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடிதிருத்தும் நிலையம் !

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
08/11/2024
in மாவட்டங்கள்
0
இந்தியாவிலேயே முதல்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடிதிருத்தும் நிலையம் !

வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் நிலையம் தனியாக திறக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் நிலையம் தனியாக திறக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஒரு சிறிய முடிதிருத்த நிலையம் வைத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்கள், ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பழைய மீன் மார்க்கெட் அருகில் புதிய முடிதிருத்தும் கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு ஏதுவான சாய்வு தளம் அமைத்து ஆரம்பிக்கப்பட்டது. 

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். பின்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்யப்பட்டது. அத்துடன், அவர்களுக்கு உணவு பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஜிவி செல்வம் கூறியதாவது:

இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிக்கான இலவச முடிதிருத்த கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் காரணம் ராஜா தான். அவர் பத்தாண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கான இலவச முடி திருத்தம் செய்து வருகிறார்.  அவர் என்னிடம் அணுகிய போது தலைமுறை பேரவையின் சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுள் நமக்கு கொடுப்பதை மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். அது செல்வமாகட்டும், கல்வியாகட்டும், அன்பாகட்டும், பண்பாகட்டும், நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் தான் நாம் வளர்வோம், அதற்காகத்தான் இதை செய்து கொண்டிருக்கிறோம். 

இன்று முக்கியமான இந்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டிய விஷயம் உலக அளவில் அதிகமாக மாற்றுத் மாற்றுத்திறனாளிகள் உள்ள நாடு ரஷ்யா 27 சதவீதம். இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் 2.98 சதவீதம், சராசரியாக இந்தியாவில் 2.21 சதவீதம் தமிழ்நாட்டில் 1.6% தான் இருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் வெளித்தோற்றத்தில் சில குறைகள் இருக்கலாம் ஆனால் உள்தோற்றத்தில் அவர்கள் சிறந்தவர்கள். இதேபோன்ற முன்னெடுப்புகள் தமிழ்நாடு முழுவதும் பரவி நடைபெற வேண்டும். இந்த மாதிரி தொண்டு நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன. இதைப் பார்த்து அவர்களும் முடி திருத்தத்தை அந்தந்த மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags: வேலூர்
Previous Post

புதுச்சேரியில் பாறை ஓவிய முகாம்

Next Post

விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved