திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர்கள் ஆனந்தன், ஹோட்டல் முரளி, மகளிர் அணி முத்தம்மாள் ராஜாராமன், வேலு, சபாபதி, ஆகியோர் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கிளைச்செயலாளர்கள் ஞானமூர்த்தி, ஆனந்தன், சுரேஷ், வேலு, ரமேஷ். சந்திரசேகர், ராமு, ஆகியோர் தலைமையிலும், 70க்கும் மேற்பட்ட பெண்கள்உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்துவிலகி, திமுக மாவட்ட செயலாளரும் ஆரணி எம் பியுமான தரணி வேந்தன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது அவர்களிடையே தரணிவேந்தன் பேசியதாவது:-நல்ல பல திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களுக்காகவும் மகளிர் காசுமணி நேரமும் உழைத்து வருகிறார்.
பெண்களுக்கான மகளிர் அதனுடைய பலனாக உரிமைத் தொகை, மகளிர் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக ஏராளமானோர் திமுகவை நாடி வருகின்றனர்.
தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்திய பாஜக அரசு தேர்தலை காட்டி முடக்க நினைத்ததை முன்கூட்டியே அறிந்த முதலமைச்சர் மூன்று மாத மகளிர் உரிமை தொகை மற்றும் 2000 ஊக்கத் தொகையை சேர்த்து 5000 ரூபாயை முன்கூட்டியே கணக்குகளில் வரவு வைத்ததால் ஏழை எளிய மக்களுக்கும் நடுத்தர சாதாரண மக்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருந்தது.
திமுகவின் பல திட்டங்கள் மக்களிடையே பேசுபொருளாக மாறியதால் வருகின்ற தேர்தலில் நமது திட்டங்கள் மூலமாக நாம் அருமையான வெற்றியை பெறுவோம். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும் மக்களிடையே நம்முடைய நம் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர் ஆர்யாத்தூர் பெருமாள், விவசாய அணி மருதாடு சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன். உமாபதி. மருதாடு துளசி, ரமேஷ், புண்ணியகோட்டி, சுரேஷ், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.




Start profiting from your network—sign up today!