Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
13/11/2024
in மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்!

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டம்

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் விமர்சியாக நடைபெற உள்ள நிலையில் தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவுக்கு சுமார் 40 முதல் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் செல்போன் டவர்கள் இணைப்புகள் கிடைக்காமல் தப்பித்துப் போகும் நிலை இருப்பதாகவும் அதுபோன்று இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவர்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களில் வைக்கப்படும் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தண்ணீர் இருப்பதில்லை என்று குற்றச்சாட்டு வருவதாகவும் இந்த ஆண்டு அதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தினார் மேலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மின் இணைப்புகள் துண்டிக்காமல் இருக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களை கூடுதலாக இயக்கவும் அறிவுறுத்தினார்.கிரிவல பாதையில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்கவும் ரோந்து பணிகளை தீவிர படுத்தவும் அறிவுறுத்தியவர் திருவிழாவுக்கு வருகை தந்து விடுதிகளில் தங்கி இருந்தவர்களை கணக்கெடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் திருவண்ணாமலையில் பயனற்ற நிலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை மாற்றி புதிய வகை சிசிடிவி கேமராக்களை மாற்றவும் தேவைப்படும் நிதியினை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தினார்.

கிரிவலப் பாதையில் உள்ள மரச் சிற்பங்களையும் கண்காணித்து சீரமைக்கவும் அறிவுறுத்தினார்.தீபத் திருவிழாவின்போது காவல்துறை வருவாய்த்துறை இந்து அறநிலையத்துறை என மூன்று துறைகளில் சார்பில் குழு அமைக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் பிரதான கோபுரங்களில் பணியமர்த்தவும் அறிவுறுத்தினார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் அன்று நடைபெறும் பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு உள்ளே வரும் பக்தர்களை பிரதான கோபுரங்களின் நுழைவாயில் முன்பாக கூட்டம் அதிகமாக சேருவதை தவிர்க்க பல கட்ட சோதனைகளை அமைத்து பரிசோதிக்கவும் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சேகர்பாபு பேசுகையில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாள் அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை கூட்டமான பகுதிகளில் இளைஞர்களையும் சற்று கூட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் வயது முதிர்ந்தவர்களையும் பணியமற்ற அறிவுறுத்தினார் மேலும் ஷிப்ட் முறையில் பணியாற்றுவதற்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திரு கார்த்திகை தீபத் திருவிழாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும்.

2,668 அடி உயரத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தினை பார்த்து விட்டு வரும்போது மலையில் தீ மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும் அதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும்.திருவிழா காலங்களில் ஆட்டோ கட்டண உயர்வை கட்டுப்படுத்த ஆர்டிஓ அதிகாரிகள் மூலம் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருப்பதாகவும்.

இந்த ஆண்டு அருணாச்சலேஸ்வரர் திரு கார்த்திகை தீபத் திருவிழா சேகர்பாபு தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தவர்.திரு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது செல்போன் தவறுகள் இணைப்பு கிடைக்காமல் இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவுரை.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் ஊருக்கு செல்லும் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்களை இயக்கவும் பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுரை…..திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்த ஆண்டு நடைபெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அருணாச்சலேஸ்வரர் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் நல்லதே நடக்கும் என்று அனைவரும் எண்ணுவோம் நல்லதே நடக்கும் என்று பேசிய அமைச்சர் சேகர்பாபு.

முன்னதாக திருவண்ணாமலை தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தீபத் திருவிழாவின் முன் ஏற்பாடுகளை குறித்து கோவில் ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டறிந்து அங்குள்ள தங்கத்தேர் சீர் அமைக்கப்படுவதை ஆய்வு செய்தார்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்: துணை முதல்வர்

Next Post

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved