Saturday, August 8, 2026
27 °c
Tiruvannamalai
31 ° Sun
32 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பொங்கல் பரிசுத் தொகுப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/01/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
பொங்கல் பரிசுத் தொகுப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர். எந்தப் பொருளும் பெறாத குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

மனித குலத்துக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழுக் கரும்பு ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப் படும் என்று கடந்த 2 -ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.பொங்கல் திருநாளை முன்னிட்டு பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி – சேலைகள் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் ரொக்கப் பரிசு

பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாட ரூ.1,000 ரொக்கமும் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாதவர்களைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப் பரிசு கிடைக்கும்.

மகளிர் உரிமைத் தொகை

ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, அதாவது வரும் 10-ம் தேதியே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

எத்தனை பேருக்குப் பயன்?

அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பானது 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.238.92 கோடியை ஒதுக்கீடு செய்து ஏற்கனவே உத்தரவிட்டது. இவை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.

AlsoRead

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத் தொகையும் இப்போது இடம் பெற்றுள்ள நிலையில், அதற்கென தனியான உத்தரவை அரசு பிறப்பிக்கவுள்ளது.

கரும்பு கொள்முதல்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக கடந்த ஆண்டைப் போன்று முழுக் கரும்பு ஒன்றுக்கு தோராயமாக ரூ.33 வீதம் கொள்முதல் செய்ய தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இதற்கென குழுக்களை அமைத்து கரும்புகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக அரசு அறிவிப்புபரிசுபொங்கல்மகளிர் உரிமைத் தொகை
Previous Post

விவசாயியை தாக்கிய வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்

Next Post

கொள்ளையர்களிடமிருந்து சரக்கு கப்பல் மீட்பு

Related Posts

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:

08/08/2026
“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

“அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”

08/08/2026

தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”

08/08/2026

தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:

08/08/2026

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

08/08/2026

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

08/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொகுதி மறுவரையறை மசோதாவை கைவிட வேண்டும்:
  • “அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியார் பள்ளிகள் வளர்கின்றன”
  • தொகுதி மறுவரையறை எம்.பி.க்கள் கூட்டம்: “அரசியல் நாடகத்தில் பங்கேற்க மாட்டோம்”
  • தொகுதி மறுவரையறை ஆலோசனைக் கூட்டம்:
  • காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்.10-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved