Tuesday, June 17, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முருகன் கோயில் தேரோட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
27/01/2024
in ஆன்மீகம், மாவட்டங்கள்
0
முருகன் கோயில் தேரோட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

AlsoRead

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தைப்பூச திருவிழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி சுவாமி நிலத்தில் புற்றுமுன் எடுத்தலும், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகளுடன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடும், பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பால் குட ஊர்வலமும், சாமி திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இத்தனை தொடர்ந்து நேற்று மாலை விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.


பெண்கள் மட்டும் விழாவின் முக்கிய நாளான இன்று காலை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் எங்கும் காணாத வகையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை நிலை பெயர்த்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10000 பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விழாவில் ஏழைகள் அன்னதான கமிட்டி சார்பில் 10000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் காலை முதல் இரவு வரை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், நாளை (மறுநாள் ( திங்கட்கிழமை ) விழா கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், வருகிற 30-ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர்கள் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர், விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags: ஆயிரக்கணக்கான பக்தர்கள்சாமி தரிசனம்தர்மபுரிதைப்பூச தேர்த்திருவிழா
Previous Post

நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை

Next Post

முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சனம்

Related Posts

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

யாருக்கு என்னென்ன பலன்கள்? அரசியல் நகைச்சுவை ஜோதிடம்..!

26/04/2025
சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved