Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

admin by admin
24/08/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில் எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு சார்பாக எச்ஐவி/எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக எச்ஐவிஃஎய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 

சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவிஃஎய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்” “LET COMMUNITIES LEAD” என்ற மைய கருத்தை அடிப்படையாக கொண்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு மையமும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து எச்.ஐ.வி இல்லா சமுதாயத்தை உருவாக்கிட பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இதன் விளைவாக தற்பொழுது, எச்.ஐ.வி தொற்று கண்டுபிடித்தவுடன் எச்ஐவி தொற்றாளர்கள் அனைவருக்கும் கூட்டு மருந்து சிகிச்சையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், எச்.ஐ.வி தொற்றினை பூஜ்ய நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் எச்.ஐவி, மற்றும் எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிப்பு செய்யாமை, எய்ட்ஸால் இறப்பு இல்லாமை என்ற இலக்கினை அடைய மாவட்டத்தில் எச்.ஐ.வி. ஃ எய்ட்ஸ் தடுப்பு பணி சிறப்பாக செயல்படுகிறது.

“நம்பிக்கை மையத்தில் 2023-2024-ஆம் ஆண்டில் பரிசோதனை செய்தவர்கள் மொத்தம் 114878 நபர்கள் ஆவார்கள். 2023-2024 கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்தவர்கள் மொத்தம் 28870 நபர்கள் ஆவார்கள்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டு மருந்து சிகிச்சை மையம் (ART) மற்றும் அரசு மருத்துவனைகளில் செயல்படும் இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை (LAC) மையங்களின் மூலம் சுமார் 6998 நபர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டிக்க கூடிய கூட்டு மருந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்தவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையங்களின் மூலம் சுமார் 116 மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை, பால்வினை நோய் குறித்த ஆலோசனைகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.

எச்ஐவிஃஎய்ட்ஸ் பற்றிய தகவல்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 419 1800 தொடர்பு கொள்ளலாம். மேலும் ஐயம் தவிர் (போன்ற மொபைல் செயலியில் தேவையான அடிப்படை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. 

இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக நேற்று நடைபெற்ற எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கல்லூரி மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.  

தொடர்ந்து, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவிகள், அருணை இன்ஜினியரிங் காலேஜ், விஷன் பேரா மெடிக்கல் காலேஜ், அல்மிதினா மேனேஜ்மென்ட் காலேஜ், லயோலா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் எச்ஐவிஃஎய்ட்ஸ் பரிசோதனை வாகனமும் இடம்பெற்றிருந்தது. மேலும் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி, எச்ஐவிஃஎய்ட்ஸ் பற்றிய மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டு, துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். 

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், துணை இயக்குநர் (சுகாதாரநலப்பணிகள்) மரு. செல்வகுமார், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஹரிகரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட அலுவலர் (பொ) சுப்ரமணியன், மாவட்ட மேற்பார்வையாளர் முருகானந்தம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags: திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Previous Post

செஞ்சிக்கோட்டையை பாரம்பரியமிக்க சுற்றுலாத்தளமாக மாற்ற ஆய்வு

Next Post

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved