Friday, May 23, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மலைபாதையில் ரூ.1.32 கோடியில் புதிய சாலை கலசபாக்கம் எம்எல்ஏ., கலெக்டர் நேரில் ஆய்வு 

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
மலைபாதையில் ரூ.1.32 கோடியில் புதிய சாலை கலசபாக்கம் எம்எல்ஏ., கலெக்டர் நேரில் ஆய்வு 
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஜவ்வாதுமலைப்பகுதியில் ரூ.1.32 கோடி புதிய சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

AlsoRead

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாது மலைப்பகுதியில் ஜமுனாமரத்துார் உட்பட 75 மலை கிராமங்கள் உள்ளன. பல ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில் மலை பகுதியில் முறையான  சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பெரியவல்லி குட்டக்கரை வரை 3 கி.மீட்டர் தொலைவுக்கு உரி சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு பைக் மற்றும் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.  சாலை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் திருவண்ணாமலை வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து இதில் உரிய கவனம் செலுத்தும்படி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் துணை முதல்வர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எ.வ.வேலு துரித நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று நேரில் சென்று சாலை போடும் பணிகளை தீவிரப்படுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ஜவ்வாது மலைபகுதியில் பெரியவள்ளியிலிருந்து குட்டகரை வரை ரூ.1.32 கோடியில் 3 கிலோ மீட்டருக்கு சாலை போடும் பணி துவங்கியுள்ளது.இந்த் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதே போன்று சாலை போடும் பணி பல இடங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

என்றார்.

நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்தனர்.

இதில் ஜமுனாமரத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், குட்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவானி கோவிந்தராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhதிருவண்ணாமலைதிருவண்ணாமலை மாநகராட்சிதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்திருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

BSNL 5G எந்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்?

Next Post

முதலமைச்சரின் பாராட்டு மழையில் அமைச்சர் அன்பில் மகேஷ் !

Related Posts

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025
திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
  • எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved