Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/12/2023
in செய்திகள், தமிழ்நாடு
0
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேலூர், டிச. 21:
பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் அத்தியாவசிய உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாண வர்களின் கற்றல் மற்றும் கட்டிட மேலாண்மை ஆகியவற்றுக்கு சிறப்பு நேற்குழு ஒன்றை நியமிக்கலாம் என்று இலவச மற்றும் கட்டாய ஆரம்ப கல்வி சட்டம் 2009 அறிவுறுத்தியுள் ளது. அதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் எஸ். எம்.சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை மறுசீரமைக்க கடந்தாண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட் டது. இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ‘டிஎன்எஸ் இடி பேரண்ட் ஆப்’ உருவாக்கப்பட்டது. இந்த ஆப்பில் பள்ளியின் தேவைகள் படிப்படியாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.


சமீபத்தில் கிடைத்த தகவலின் படி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர். பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களது 60 சதவீத தேவைகள் குறித்து ஆப் மூலம் பதிவிட்டுள்ளனர். அதில் முதன்மையான நோக்கம் என்பது பள்ளியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது. மாணவர்க ளின் கற்றல், வகுப்பறைகள், பள்ளி வளாகம், கல்வி உபகரணங்கள், கல்வியின் தரம் ஆகியவற்றை தரம் உயர்த்த உயர்த்த கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு தேவைப்படும் உள் கட்டமைப்பு வசதிகளை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உரிய வழிகாட்டுதல்களு டன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:
பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பாலான தரவுகளை டிஜிட்டல் மயமாக்குவதை செய்திருக்கும் மாநிலமாக நாடு திகழ்கிறது. இதனை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதற்காக புதிய உள் கட்டமைப்பு வசதிகளின் தேவை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்று குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இவற்றை ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேரடியாக இதன் மூலம் வெளிப்படியாக தெரிய வரும். இத்தகைய பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கையால் பள்ளி செயலாளருக்கு சில பரிந்துரைகளை வழங்க முடியும் அதன் பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார். இத்தகைய நடைமுறையை சரி யான முறையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓட் டு மொத்த கட்டமைப்பும் எப்படி செயல்படும் என்ற விவரமும் வெளியிடப்பட் டுள்ளது. முதலில் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் தேவைகளை கண்டறிய வேண்டும். இதையடுத்து பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தேவைகளை பட்டியலிட வேண்டும். இவற்றை பள்ளி மேலாண்மை குழுவினர் விரிவாக அலசி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புடிஎன்எஸ் இடி பேரண்ட் ஆப்பள்ளி மேலாண்மை குழு தீர்மானம்
Previous Post

டிஎம்சி என்றால் என்ன தெரியுமா ?

Next Post

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved