Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘ஆபரேஷன் சிந்தூர்’ : உலக நாடுகளின் ரியாக்ஷன்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
07/05/2025
in இந்தியா, உலகம்
0
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்தியா நடத்தியுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடி தாக்குதல் குறித்து அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளன.

பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 14 நாட்களுக்கு பிறகு நடந்த பதில் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரின் குடும்பத்தினரின் 10 பேர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பதில் தாக்குதல் ‘போர் நடவடிக்கை’ என விமர்சித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ஆயுத படைகளுக்கு தெரியும் எனக் கூறினார். இதனால் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதேநேரம், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ‘இந்தியா இனி தாக்குதலை நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்தப்படும்’ என தெரிவித்தார். இதனால், இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?, அதனால் போர் உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

AlsoRead

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்நிலையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த தாக்குதல் குறித்து தனக்கு தாமதமாகத்தான் தகவல் கிடைத்ததாகவும், இந்த தாக்குதல் வெகு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் தள பதிவில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சுமுகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியா நடத்தியுள்ள தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரிடம் விவரித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனா

சீன வெளியிறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக சர்வதேச நாடுகளுடன் இணைந்து சீனா முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

ரஷ்யா

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இரு தரப்பும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனறும், ராஜ ரீதியிலான நடவடிக்கை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

இங்கிலாந்து

பதட்டங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் ஆதரவளிக்க இங்கிலாந்து தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் ஜோனதன் ரெனால்ட்ஸ் கூறியுள்ளார்.

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பரேட் கூறுகையில், பயங்கரவாதத்தின் கொடுமையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை

இந்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மிகவும் கவலை கொண்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: operation sindoorReaction from around the world
Previous Post

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் : பிரதமருக்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி

Next Post

விஜய்க்கும்… பவன்கல்யாணுக்கும் என்ன தெரியும்? நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் பாய்ச்சல்..!

Related Posts

Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026
Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

04/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved