இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 12 ஆண்டு திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருவருக்கிடையே ஏற்பட்டடது. இதையடுத்து, பிரச்னை காரணமாக அண்மைக் காலமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
பிரிவதாக அறிவித்து பின்னர். இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஏப். 24-ம் தேதி நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி, இருவரையும் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இருவரும் நேரில் ஆஜராகி, தங்களின் நிலைபாட்டை தெரிவித்தனர்.
மேலும், குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இருவரும் தங்களின் விவாகரத்து நிலைபாட்டில் உரியதாக இருப்பதாக தெரவித்திருக்கும் நிலையில், விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



