திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் அடிஅண்ணாமலை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டி போட்டியை தொடங்கி வைத்தார்.
13 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு கிரிவலப்பாதை அபய மண்டபத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும், 15 முதல் 17 வரை வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும், 15 முதல் 17 வரை வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு அடிஅண்ணாமலையிலிருந்து தொடங்கிமாவட்ட விளையாட்டு அரங்கம் வரையும் நடந்து நிறைவடைந்தது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ 2000, நான்கு முதல் பத்து இடம்பெற்று வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.250-ம் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



