திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கும் அவருடைய சகோதரருக்கும் கடந்த பல ஆண்டுகளாக நிலப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமார் இது சம்பந்தமாக புகார் அளிக்க வந்துள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் கார் நிறுத்தும் இடத்தில் குமார், அவருடைய மனைவி பூங்கொடி ஆகிய இருவரும் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடல் மீது உடல் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்து உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு 11 மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் குமாருக்கு 45 % தீக்காயமும், மனைவி பூங்கொடிக்கு 30% தீக்காயமும் ஏற்பட்டு இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர்.



