வலங்கைமான் தாலுகா மணலூர், மதகரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் வசித்து வருகிறார்கள்.
இந்த இரண்டு ஊராட்சிகளிலும் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை உட்பட பல்வேறு தெருக்கள் மற்றும் இணைப்பு சாலைகள் கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன.
தற்பொழுது பெய்த மழை காரணமாக அவை மேலும் மோசமாகியுள்ளன. அவற்றை சீரமைக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் ஒரு பயனும் இல்லை. எனவே வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



