போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல், சித்தேரி ஆகிய 3வருவாய் கிராமமக்களுக்கான மனுநீதிநாள் முகாம்கேளூரில் நேற்றுநடைபெற்றது கலெக்டர் தர்ப்பகராஜ்தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, போளூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, துணைதாசில்தார்தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேளூர் வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணண் வரவேற்றார். முகாமில் 139 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 58ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கி னார். இதல் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, ரபியுல்லா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சாண்டி, கேளூர் கிராம நிர்வாக அலுவலர் மயிலரசன் உள்பட பலர் கலந்து கோண்டனர்



