Friday, May 23, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
12/11/2024
in செய்திகள், புதுச்சேரி
0
போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரியில் மருத்துவ கல்லூரிகளில் சேர என்.ஆர்ஐ.இட ஒதுக்கீட்டில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த 44 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் இங்கு ஜிப்மர் மற்றும் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி உள்பட 8 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.இந்த எட்டு மருத்துவக் கல்லூரிகளில் லட்சுமி நாராயணா, ஆறுபடைவீடு, மற்றும் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகம் என்பதால் நேரடியாக எம். சி. சி. (மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.மீதமுள்ள ஐந்து மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1070 மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளது. இதில் 2024- 25 -ம் ஆண்டுக்கான அரசு இட ஒதுக்கிடாக 432 இடங்கள் பெறப்பட்டது.

AlsoRead

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

இது மட்டுமின்றி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை தவிர மீதமுள்ள நான்கு கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக 116 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவ படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியது, இதன்படி மூன்று கட்ட கலந்தாய்வில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. என். ஆர். ஐ. இட ஒதுக்கீட்டில் 116 இடங்களுக்கு 186 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் இவர்களுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்து 55 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்டமாக 61 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. 

இதில் 61 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் போது 44 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.மீதமுள்ள 17 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை இதில் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற 44 மாணவர்களும் கொடுத்த சான்றிதழ்கள் போலி ஆவணங்களை என தெரியவந்தது.இதனை அடுத்து புதுச்சேரி சென்டாக் கன்வீனர் ஷெரின் ஆன் சிவன், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த லாஸ்பேட்டை போலீசார் 44 மாணவர்கள் போலி ஆவணங்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் 44 மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மருத்துவ படிப்பில் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவ கல்லூரியில் சேர முயற்சி செய்த 44 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாணவர்களை மட்டுமின்றி இவர்களுக்கு போலி சான்றிதழ் அளிக்க உதவிய இடைத்தரகர்கள் மற்றும் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: புதுச்சேரி
Previous Post

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Next Post

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Related Posts

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025
திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

“வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன்” : அன்புமணி ராமதாஸ்

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
  • எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved