Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அதிகாரிகளுக்கு டோஸ்: பள்ளியில் உணவு சரியில்லாததால் ஒப்பந்ததாரர் நீக்கம்! துணை முதல்வர் அதிரடி!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
udhayanidhi
0
SHARES
144
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வந்தார். 5ம்தேதி மாலை அரசு சட்ட கல்லூரியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துகொண்டு ஓய்வெடுப்பதற்காக செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று சாலாமேடு பகுதியில் அரசு மாதரி பள்ளிக்கு சென்றார். அப்போது உணவு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுப்பது குறித்து கேட்டறிந்த அவர் கழிவறைகளை முறையாக பராமரிக்காததால் வார்டனை கண்டித்து டோஸ் விட்டார். தொடர்ந்து நேற்று காலை திடீரென ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சென்று விவசாயிகளிடம் கொள்முதல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதனை அதிகாரிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து மார்க்கெட் கமிட்டியில் பருத்தி, எள், மணிலா மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளையும், திறந்தவெளி ஏலக் கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயியிடம் ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், அன்றாட சந்தை நில விவரம், விளைபொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கு கழிவறைகளை முறையாக பராமரிக்காததால் அதிகாரிகளை கண்டித்தார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

சிறப்பு செயலாக்க திட்ட அலுவலர் தாரேஸ்அகமது தலைமையிலான அதிகாரிகள் முதல்வரின் சிறப்பு திட்டங்களான காலை உணவு, விடியல் பயணம் குறித்து முன்கூட்டியே நேரடியாக களஆய்வு மேற்கொண்டு புகார்களை துணை முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில், புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, காலை உணவு சரியாக வழங்காததை சுட்டிகாட்டி உடனடியாக இதற்கான ஒப்பந்ததாரரை மாற்ற அதிரடியாக உத்தரவிட்டார். அதேபோல், புகார் தொடர்பாக பயனாளிக்கு போன் செய்த துணைமுதல்வர் கூட்டத்திலேயே அதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து ஒரு வாரத்திற்குள் தீர்வு காண உத்தரவிட்டார். பின்னர் அரசு நீச்சல் குளத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு குளோரின் பவுடர் போடாதது குறித்தும், கழிவறை, ஆடைகள் மாற்றும் அறைகளை தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். துணை முதல்வரின் அடுத்தடுத்த ஆய்வுகளால் மற்றத்துறை அலுவலகங்கள் உஷாராகின. அனைத்து பணிகளும் ஜரூராக நடைபெற்றது. விழுப்புரத்தில் துணை முதல்வரின் இந்த அடுத்தடுத்த ஆய்வுகளும், அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவுகளும், ஒப்பந்தம் ரத்து போன்ற நடவடிக்கைகளும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திட்ட பணிகளை முடிக்க காலக்கெடு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கள்ளச்சாராயம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நல்லாளம் ஊராட்சியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், வி.மாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மலர் ஆகியோரின் மனுக்களை பார்வையிட்டு, அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதுபோன்று தொடர்ந்து விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

எனவே அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு வரும் மனுக்கள் மீது உரிய கவனத்துடனும், விரைந்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை காகிதங்களாக பார்க்காமல், கோரிக்கைகளில் உள்ள மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி குறிப்பிடுவார். அரசு திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய அரசு அலுவலர்களாகிய நீங்கள்தான் அரசிற்கும், பொதுமக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்’ என்றார். கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளிலும் என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கிறது, என்னென்ன இடர்பாடுகள் இருக்கிறது, அதை எப்படி முடிக்கலாம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் காலக்கெடு நிர்ணயித்து, பணிகளை முடிக்க அறிவுறுத்தியிருக்கிறோம். ஆய்வுக்கூட்டம் குறித்த அறிக்கையை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் அங்கிருந்து அதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வர்’ என தெரிவித்தார்.

Tags: உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்விழுப்புரம்விழுப்புரம் மாவட்டம்
Previous Post

கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Next Post

நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved