Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீட்டை பொது நுாலகமாக மாற்றும் பணி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
28/12/2023
in செய்திகள்
0
டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீட்டை பொது நுாலகமாக மாற்றும் பணி
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீடு குமரி மாவட்டம், குழித்துறை பழயபாலம் அருகில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் தனது பூர்வீக வீட்டை பொது நுாலக மாற்றும் பணி நடைபெற்று வந்தது.
இப்பொது நுாலகத்திற்கு தனது தாய், தந்தை பெயரான ரத்தினம்மாள் செல்லப்பன் என்று பெயர் சூட்டினார்.

நூலகத்தை நேற்று அவரது தாயார் ரத்தினம்மாள் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. ஐதராபாத் மாணவி ஒருவர் 1,000 புத்தகங்களை இந்த நுாலகத்திற்கு இலவசமாக வழங்கினார். டிஎன்பிஎஸ்சி, நீட், சிவில் சர்வீஸ், வங்கித் தேர்வுக்கான புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இலவச தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இன்டர்நெட் வசதியுடன் 6 கம்ப்யூட்டர்கள் உள்ளன. காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த நூலகம் செயல்படும்.

இது தொடர்பாக சைலேந்திர பாபு கூறியதாவது

இந்த வீடு, நுாற்றாண்டு பழக்கம் உள்ளது. சில சுவர்கள், ஈட்டி மரத்தினால் கட்டப்பட்டது. பக்கத்தில் உறவினர்கள் வீடு உள்ளது. நான் இந்த வீட்டில்தான் பிறந்தேன். போட்டி போட்டு படித்தோம். அப்போது போதுமான வசதிகள் கிடையாது. விவசாய வருமானத்தைக் கொண்டே பெற்றோர் எங்களை படிக்க வைத்தனர். இந்த வீட்டில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து, டிஜிபி வரை பதவி வகிக்க முடிந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. என் நண்பர்களுடன் இணைந்து 150 மாணவ, மாணவர்களைப் படிக்க வைத்துள்ளோம். 50 மாணவர்கள் உயர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லுாரிகளில் சேரலாம். மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலை வாய்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, வாசிப்பை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

வாசிப்பு மிகப்பெரிய சுகம். ஆர்வத்துடன் தேடிப் படிக்க வேண்டும். அப்போது திறமை, தானாக வளரும். இப்போதுள்ள மாணவர்களிடம் விளையாட்டு, சினிமா ஆர்வம் இருக்கிறது. ஆனால் அறிவியல், கணிதம், மொழிகள் கற்க வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்கள், நோபல் பரிசுகள் பெற வேண்டும் என அவர் கூறினார்

Tags: சைலேந்திர பாபுடிஜிபிபொது நுாலகமாக மாற்றும் பணிவாசிப்பு மிகப்பெரிய சுகம்
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

Next Post

வரலாற்றில் இன்று டிசம்பர் 30

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved