Saturday, May 24, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/11/2024
in மாவட்டங்கள்
0
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டம் தேர்வு செய்யப்பட்டு, வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கே நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்வராயன்மலை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” நடைபெற்றது.

கல்வராயன்மலை வட்டம், வெள்ளிமலை கிராமத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வெள்ளிமலை மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சங்கத்தின் செயல்பாடுகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முழுவதுமாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, கரியாலூர் கிராமத்தில் வெள்ளிமலை பழங்குடியினர் மகளிர் மரம் இல்லா வனப் பொருட்கள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்தி நிறுவனத்தின் கட்டிடத்தினை பார்வையிட்டு, கட்டிடத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து, மீண்டும் இக்கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர், தாழ்வெள்ளார் – புரசம்பட்டு சாலை அருகில் புதியதாக பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டு, பூங்கா அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அடுத்ததாக, கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் (இருப்பு: சேராப்பட்டு) சார்பில் கூட்டுறவு வனப் பொருட்கள் விற்பனையகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் விற்பனை பொருட்களின் இருப்பு, பொருட்கள் கொள்முதல் விவரம், விற்பனை விவரம் உள்ளிட்ட தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டதுடன், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், விற்பனை நிலையத்தின் செயல்பாடுகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, சேராப்பட்டு நியாயவிலை விற்பனைக் கடையினை ஆய்வு செய்து, பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டை எண்ணிக்கை, நியாயவிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவரம் ஆகியவை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மோட்டாம்பட்டி மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் நேரில் ஆய்வு செய்யப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. அரசின் திட்டங்கள் அனைத்தும் பழங்குடியின மக்களுக்கும் சென்று சேருவதை அலுவலர்கள் உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டம்
Previous Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

Next Post

சின்னசேலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்!

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved