Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
22/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன். இவர் அதே பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து தனியார் பல்கலைகழகத்தில் பிஎச்டி பயின்று வருகிறார். 

இந்த நிலையில் இவர் கடந்த 10 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். விடுமுறை முடிந்து கடந்த 13-ஆம் தேதி இவர் வீட்டிற்கு திரும்ப வந்த போது வீட்டீன் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக  உள்ளே சென்று பார்த்தபோது, தனது படிப்பிற்காக பயன்படுத்தி வந்த லேப்டாப் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதனையடுத்து அருகே உள்ள காட்பாடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் காட்பாடி காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் நேற்று மாலை காட்பாடி உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மதிநகர் அருப்பு மேடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை  நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பேகில் லேப்டாப் இருப்பதை பார்த்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் காட்பாடியில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு லேப்டாப்ளை மட்டும் குறி வைத்து திருடியது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து காட்பாடி போலீசார் காட்பாடி கிருஷ்ணன் பேட்டை அருள் நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் (35) காட்பாடி அருப்புமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) காட்பாடி காந்தி நகர் பகுதியில் சேர்ந்த முரளி (36) மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள ஏழு லேப்டாப்புகள் ஒரு கம்ப்யூட்டரை பறிமுதல் செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhகாட்பாடிவேலூர்வேலூர் மாவட்டம்
Previous Post

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் திடீர் தர்ணா

Next Post

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved