Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் – போலீஸ் மோதல்: தெலுங்கானாவில் பதற்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/03/2025
in இந்தியா
0
ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் – போலீஸ் மோதல்: தெலுங்கானாவில் பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தெலுங்கானா அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலை மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்து வருகிறது.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

தெலுங்கானாவில் ஐதராபாத் பல்கலை வளாகத்தை ஒட்டியுள்ள உள்ள 400 ஏக்கர் நிலத்தில் ஐ.டி., பார்க் அமைக்க ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிலத்தை ஏலம் விடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்கு பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி உள்பட ஐதராபாத் பல்கலை மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனக் கூறி, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த இடத்திற்கும், பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜே.சி.பி., இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவதை அறிந்த மாணவர்கள், அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சொல்லியும் அவர்கள் கலைந்து போகவில்லை. இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களை போலீசார் வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும், கைது செய்ததாக பி.ஆர்.எஸ்., கட்சி குற்றம்சாட்டியது. மேலும் காங்கிரஸ் அரசின் இந்த செயலுக்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இது குறித்து பி.ஆர்.எஸ்., கட்சி கூறுகையில், ‘பல மாணவிகளின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. இதனால், அவர்கள் கதறி அழுதனர். அப்படியிருந்தும் அவர்களை விடுவிக்காமல், கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர்.

ராகுல் ஒரு கையில் அரசியலமைப்பு பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார். அதே சமயத்தில் அவரது காங்கிரஸ் அரசாங்கம், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Tags: Hyderabad UniversityTamil News Today
Previous Post

மகளிர் பெயரில் சொத்து பதிவு : பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு நாளை முதல் அமல்

Next Post

அப்பப்பா..தங்கம் விலை கண்ணைக்கட்டுதே..! 1 சவரன் விலை ரூ.67,400

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved