Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் – போலீஸ் மோதல்: தெலுங்கானாவில் பதற்றம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/03/2025
in இந்தியா
0
ஐதராபாத் பல்கலையில் மாணவர்கள் – போலீஸ் மோதல்: தெலுங்கானாவில் பதற்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தெலுங்கானா அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஐதராபாத் பல்கலை மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவத்திற்கு கண்டனம் எழுந்து வருகிறது.

தெலுங்கானாவில் ஐதராபாத் பல்கலை வளாகத்தை ஒட்டியுள்ள உள்ள 400 ஏக்கர் நிலத்தில் ஐ.டி., பார்க் அமைக்க ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிலத்தை ஏலம் விடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதற்கு பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி உள்பட ஐதராபாத் பல்கலை மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது எனக் கூறி, மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த இடத்திற்கும், பல்கலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜே.சி.பி., இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவதை அறிந்த மாணவர்கள், அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சொல்லியும் அவர்கள் கலைந்து போகவில்லை. இதனால் இருதரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களை போலீசார் வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

AlsoRead

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தலைமுடியை பிடித்து இழுத்தும், அடித்தும், கைது செய்ததாக பி.ஆர்.எஸ்., கட்சி குற்றம்சாட்டியது. மேலும் காங்கிரஸ் அரசின் இந்த செயலுக்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இது குறித்து பி.ஆர்.எஸ்., கட்சி கூறுகையில், ‘பல மாணவிகளின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. இதனால், அவர்கள் கதறி அழுதனர். அப்படியிருந்தும் அவர்களை விடுவிக்காமல், கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டனர்.

ராகுல் ஒரு கையில் அரசியலமைப்பு பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார். அதே சமயத்தில் அவரது காங்கிரஸ் அரசாங்கம், அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Tags: Hyderabad UniversityTamil News Today
Previous Post

மகளிர் பெயரில் சொத்து பதிவு : பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு நாளை முதல் அமல்

Next Post

அப்பப்பா..தங்கம் விலை கண்ணைக்கட்டுதே..! 1 சவரன் விலை ரூ.67,400

Related Posts

Vikram Misri

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026
Rahul Gandhi

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: “பிரதமரின் மௌனம் ஆபத்தானது” -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

05/03/2026

பிஹார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ் குமார்! மாநிலங்களவை தேர்தலில் போட்டி

05/03/2026

மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவுக்கு எண்ணெய் வழங்க முன்வந்த ரஷ்யா – முழு விவரம்!

04/03/2026

சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டது – தரிசன நேரத்தில் மாற்றம்!

03/03/2026

ஈரான் – இஸ்ரேல் மோதல்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேச்சு

02/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved