Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேர் பயன்படுத்துவது தவறல்ல : சுப்ரீம் கோர்ட் அதிரடி

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/04/2025
in இந்தியா
0
மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

” நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,” என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

AlsoRead

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம், ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்ற உளவு மென்பொருளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது, ‘ஐ – போன், ஆண்ட்ராய்டு’ உள்ளிட்ட அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் எளிதாக ஊடுருவி, உளவு பார்க்கும் திறன் உடையது.

இந்நிலையில் நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு துறையினரும், இந்த பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்படுவதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.

இது தொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்து இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று (29ம் தேதி) விசாரணைக்கு வந்தது.

அப்போது சில மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தினேஷ் திவேதி கூறுகையில்:

இந்த விவகாரத்தில், ஸ்பைவேரை மத்திய அரசு வைத்து உள்ளதா அல்லது வாங்கி உள்ளதா இல்லையா என்பது தான் அடிப்படை பிரச்னை. அரசிடம் இருந்தால், இன்று வரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது:

ஸ்பைவேரை அரசு பயன்படுத்துவதில் என்ன தவறு. ஸ்பைவேரை வைத்து இருப்பது தவறில்லை. யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் அல்லது தியாகம் செய்ய முடியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், பயங்கரவாதிகள், தனியுரிமையை கோர முடியாது என்றார்.

அதற்கு நீதிபதி சூரியகாந்த்: தனி நபருக்கான தனி உரிமை அரசியல்சாசனத்தின்படி பாதுகாக்கப்பட்டது என்றார்.

இதனைத் தொடர்ந்து பெகாசசுக்கு எதிராக வாட்ஸ் அப் செயலி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags: national securityspywareSupreme Court
Previous Post

2026ம் ஆண்டு தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும் திமுக : 5 மாவட்டங்களில் அதிரடி மாற்றம்

Next Post

சிறப்பு மக்களவை கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் கடிதம்

Related Posts

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

11/05/2025
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

இந்தியா தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கும் : பிரதமர் மோடி

11/05/2025

போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

11/05/2025

‘அற்புத தலைவர்களும், ‘அற்ப’ தலைவர்களும்….’’

11/05/2025

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

10/05/2025

இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த சீனா விருப்பம்

10/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved