Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சிக்கிய பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள்! எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/10/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
சிக்கிய பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள்! எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் பிஎஸ்கே குழும நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் பிஎஸ்கே குழும நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள டூமிங்குப்பம் பகுதியில் பிஎஸ்கே குழுமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல்வேறு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், 2023-24ம் நிதியாண்டிற்கான மொத்த வருவாய், நிகர லாபம் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக அதிமுக நிர்வாகியான இளங்கோவன் தொடர்பான நிறுவனங்களில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் தொடர்பாகவும், கட்டுமான பணிகள் மேற்கொண்டது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

AlsoRead

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

எடப்பாடியின் நண்பரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இது, அதிமுக ஆதரவாளரான தொழிலதிபர் பெரியசாமிக்கு சொந்தமான நிறுவனம். தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை முக்கிய ஒப்பந்ததாரராக இந்த குழுமம் உள்ளது.

அதேநேரம் அதிமுக ஆட்சியின் போது பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் தான் அரசு கட்டுமானப்பணிக்கான முதன்மை ஒப்பந்ததாரராக செயல்பட்டது. இந்த குழுமம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த நிறுவனம் பல நூறு கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து கடந்த 2019 ஏப்ரல் மாதம் பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.112 கோடி வரை வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ.14 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி எம்.புதுப்பட்டியில் உள்ள எம்ஐடி கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகள், முசிறியில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரியில் கடந்த 22ம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதேபோல், கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் 3வது நாளாக சோதனை நடந்தது. இங்கும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பிஎஸ்கே குழுமத்தின் மற்ற நிறுவனங்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: இளங்கோவன்பிஎஸ்கேவருமான வரித்துறை
Previous Post

நீங்களும் மலை ஏறலாம் ! தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய இணையதளம்!

Next Post

திருவண்ணாமலை தீப திருவிழா அட்டவணை 2024!

Related Posts

Power Cut

தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?

08/06/2026
LPG Price Hike

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!

08/06/2026

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தொடரும் மின்வெட்டு: வீதியில் இறங்கி போராடிய மக்கள் – மின்வாரியம் சொல்வதென்ன?
  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved