Sunday, March 15, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கூட்டுக் கொள்ளையில்அதிகாரிகள்? – விவசாய சங்கம் பகீர் புகார்!

Balaji by Balaji
14/03/2026
in தமிழ்நாடு
0
Mullai Periyar Dam

Mullai Periyar Dam

0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும், நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கில் ‘மூவர் கூட்டணி’ செயல்படுவதாகவும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுயிக் பாலசிங்கம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அணைப் பணியில் மெத்தனமும் முறைகேடும்

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

முல்லைப் பெரியாறு அணையில் தங்கிப் பணியாற்ற வேண்டிய இளம் பொறியாளர் மகேந்திரன் என்பவர், கடந்த ஓராண்டில் வெறும் 25 முதல் 30 நாட்கள் மட்டுமே பணிக்குச் சென்றுள்ளார். விதிகளின்படி அணையில் தங்கியிருக்க வேண்டிய அவர், எஞ்சிய நாட்களில் தனது சொந்தத் தொழில்களான உரக்கடை மற்றும் ஏலக்காய் தோட்டத்தைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இத்தகைய விதிமீறல்களைக் கண்டிக்க வேண்டிய கம்பம் செயற்பொறியாளர் செல்வம், அவருக்குத் துணை போவதோடு, மகேந்திரனை அணையிலிருந்து தேக்கடி அலுவலகத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப் பரிந்துரை செய்துள்ளார்.

AlsoRead

முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தில் மெகா ஊழல்? தலைமைப் பொறியாளர் மீது விவசாயிகள் சங்கம் சரமாரி குற்றச்சாட்டு!

“பாதிப்புக்கு பயப்படுபவன் போர்வீரன் அல்ல!” – அதிமுக – தவெக கூட்டணி குறித்து சீமான் அதிரடி பேட்டி

சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்ற விஜய்: விமான நிலையத்தில் கத்தரிக்கோல் சர்ச்சையால் பரபரப்பு!

நேர்மையான அதிகாரிக்கு மிரட்டல்?

தேக்கடியில் சிறப்பாகப் பணியாற்றி வந்த டி.என்.பி.எஸ்.சி (TNPSC) மூலம் தேர்வான நேர்மையான அதிகாரி நவீன் என்பவரை, மகேந்திரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. “நான் சென்னையில் இருந்து பேசுகிறேன், உங்களுக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் வாங்கிக் கொள்ளுங்கள், இல்லையென்றால் தூக்கி அடிக்கப்படுவீர்கள்” என மகேந்திரன் மிரட்டியுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் அவர் கம்பத்தில்தான் இருந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவர் கூட்டணி மீது குற்றச்சாட்டு

செயற்பொறியாளர் செல்வம், எஸ்.டி.ஓ ராஜகோபால் மற்றும் மகேந்திரன் ஆகிய மூவரும் ஒரு கூட்டணியாகச் செயல்பட்டு, தங்களுக்குக் கட்டுப்படாத நேர்மையான அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்வதாக பாலசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்தச் செயற்பொறியாளர் கடந்த 6 மாதங்களில் 10 முறை கூட அணைக்குச் சென்றிருக்க மாட்டார். அணைப் பாதுகாப்பு குறித்து அக்கறையின்றி, குமுளியில் ஷாப்பிங் செய்வதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார். ஆர்.ஓ.வி (ROV) சோதனையின் இறுதிக்கட்டத்தின் போது கூட இவர் அணைக்குச் செல்லவில்லை” என்று அவர் சாடியுள்ளார்.

உயர்மட்ட விசாரணைக்குக் கோரிக்கை

இந்த முறைகேடுகள் குறித்து பொதுப்பணித்துறைச் செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (ENC) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்:

  • மத்திய உளவுத்துறை (IB) விசாரணை: கடந்த சில மாதங்களில் இந்த அதிகாரிகளின் வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து மத்திய உளவுத்துறை ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

  • நீதிமன்ற வழக்கு: போலி ஆவணங்கள் மூலம் பணியில் நீடிப்பதாகக் கூறப்படும் தலைமைப் பொறியாளர் ரமேஷ் மற்றும் மகேந்திரன் மீது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்படும்.

  • சைபர் கிரைம் நடவடிக்கை: போலி ஆவண விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்த வேண்டும்.

“எங்கள் ஜீவாதாரமான முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க எதையும் இழக்கத் தயார். அணை நலனில் அக்கறையுள்ள அதிகாரிகளை மட்டுமே அங்கு பணியமர்த்த வேண்டும். இல்லையெனில் கேரள அரசுடன் மறைமுக ஒப்பந்தம் செய்து அணையைத் தாரை வார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என பென்னிகுயிக் பாலசிங்கம் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது தென் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Engineer Transfer DisputeKerala Tamil Nadu Dam IssueMadurai High Court CaseMullai Periyar DamMullai Periyar Dam SecurityPennycuick BalasinghamPublic Works Department Tamil NaduPWD Corruption ComplaintPWD Officials ControversyTheni Farmers Association
Previous Post

ஈரான் விவகாரம்: புதின் திட்டத்தை நிராகரித்த டிரம்ப்; மத்திய கிழக்கில் பரபரப்பு!

Next Post

முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தில் மெகா ஊழல்? தலைமைப் பொறியாளர் மீது விவசாயிகள் சங்கம் சரமாரி குற்றச்சாட்டு!

Related Posts

Mullaperiyar Dam

முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தில் மெகா ஊழல்? தலைமைப் பொறியாளர் மீது விவசாயிகள் சங்கம் சரமாரி குற்றச்சாட்டு!

14/03/2026
NTK Seeman

“பாதிப்புக்கு பயப்படுபவன் போர்வீரன் அல்ல!” – அதிமுக – தவெக கூட்டணி குறித்து சீமான் அதிரடி பேட்டி

14/03/2026

சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்ற விஜய்: விமான நிலையத்தில் கத்தரிக்கோல் சர்ச்சையால் பரபரப்பு!

14/03/2026

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது: “தலைவர் கலைஞர் இருந்திருந்தால்” முதல்வர் நெகிழ்ச்சி

14/03/2026

துபாயா? டெல்லியா? எங்க போறீங்க – செய்தியாளர் கேள்விக்கு திரிஷா கொடுத்த ரியாக்ஷன்

14/03/2026

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழக அரசு அதிரடி – மின் கட்டண சலுகை, மானியங்கள் அறிவிப்பு!

14/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முல்லைப் பெரியாறு அணை நிர்வாகத்தில் மெகா ஊழல்? தலைமைப் பொறியாளர் மீது விவசாயிகள் சங்கம் சரமாரி குற்றச்சாட்டு!
  • முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கூட்டுக் கொள்ளையில்அதிகாரிகள்? – விவசாய சங்கம் பகீர் புகார்!
  • ஈரான் விவகாரம்: புதின் திட்டத்தை நிராகரித்த டிரம்ப்; மத்திய கிழக்கில் பரபரப்பு!
  • “பாதிப்புக்கு பயப்படுபவன் போர்வீரன் அல்ல!” – அதிமுக – தவெக கூட்டணி குறித்து சீமான் அதிரடி பேட்டி
  • “பஞ்சாபில் பாஜக ஆட்சி அமைத்தால் 1 மாதத்தில் மதமாற்றத் தடைச் சட்டம்” – அமித் ஷா

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved