Wednesday, March 18, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு: அணுசக்தி நிலையங்கள் அருகே ஏவுகணை தாக்குதலால் உச்சகட்ட பதற்றம்!

Balaji by Balaji
18/03/2026
in உலகம்
0
Tel Aviv Attack

Tel Aviv Attack

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் வலுவடைந்து வரும் சூழலில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் கொத்து குண்டுகளை (Cluster Bombs) வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

AlsoRead

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரானின் முக்கியத் தலைவர் அலி லரிஜானி உயிரிழப்பு!

“ஈரான் போர் ஒரு பொய்!” – டிரம்ப் நிர்வாகத்தை உலுக்கும் உளவுத்துறை உயரதிகாரியின் ராஜினாமா

ஆப்கன் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி – இந்தியா கடும் கண்டனம்!

பழிவாங்கும் நடவடிக்கையா?

சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் தளபதி கோலாம்ரெசா சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாகவே ஈரான் தற்போது டெல் அவிவ் நகரை இலக்கு வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளைப் பயன்படுத்துகிறது. இவை காற்றில் பிரிந்து பரந்த பரப்பளவில் விழுவதால், அவற்றை இடைமறித்து அழிப்பது சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்தா?

நேற்று மாலை ஈரானின் புஷெர் (Bushehr) அணுசக்தி நிலையத்திற்கு அருகே ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அணுசக்தி நிலையத்திற்குப் பாதிப்பில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தலைவர் ரஃபேல் க்ராஸி உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இரு நாடுகளும் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமாதானப் பேச்சை நிராகரித்த மோஜ்தபா காமேனி

ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் மோஜ்தபா காமேனி கலந்துகொண்டார். அப்போது, போர் நிறுத்தத்திற்கான அனைத்து ஆலோசனைகளையும் அவர் அதிரடியாக நிராகரித்துள்ளார். “அமெரிக்காவும் இஸ்ரேலும் அடிபணிந்து, நஷ்டஈடு வழங்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியும் உணவுப் பஞ்சமும்

பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது முதல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் விலை 3% அதிகரித்துள்ளது.

தற்போது ஈரானின் கடற்கரை பகுதிகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா குறிவைத்துள்ளதால், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடித்தால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.

Tags: Ali Larijani AssassinationCluster BombsGlobal Oil PricesIran Israel WarIran Nuclear Plant MissileMiddle East Conflict 2026Mojtaba KhameneiTel Aviv AttackUS Iran TensionWorld Food Programme Warning
Previous Post

“அரசியலில் ஓய்வு என்பதே இல்லை” மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான பிரியாவிடை!

Next Post

இந்தூரில் பயங்கரம்: EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு

Related Posts

Larijani death

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரானின் முக்கியத் தலைவர் அலி லரிஜானி உயிரிழப்பு!

18/03/2026
Donald Trump

“ஈரான் போர் ஒரு பொய்!” – டிரம்ப் நிர்வாகத்தை உலுக்கும் உளவுத்துறை உயரதிகாரியின் ராஜினாமா

17/03/2026

ஆப்கன் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி – இந்தியா கடும் கண்டனம்!

17/03/2026

ஈரான் பாதுகாப்பு செயலாளர் அலி லாரிஜானி உயிரிழப்பு? அதிரடி அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரேல்!

17/03/2026

துபாயில் தாக்குதல் அச்சம்: சென்னை-துபாய் 3 விமான சேவைகள் பாதிப்பு – 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

17/03/2026

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – தலிபான் அரசு குற்றச்சாட்டு

17/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் – 12 மாற்று ஆவணங்கள் எவை?
  • “தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு உளம்நிறைந்த உகாதி வாழ்த்து” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • “சொல்வதற்குச் சாதனை, கொள்கை இல்லாதவர்கள் ஆபாசங்களை பேசுகின்றனர்” – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
  • இந்தூரில் பயங்கரம்: EV சார்ஜிங் பாயிண்ட் வெடித்து தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு
  • இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு: அணுசக்தி நிலையங்கள் அருகே ஏவுகணை தாக்குதலால் உச்சகட்ட பதற்றம்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved