திருவண்ணாமலை அடுத்த சேகூடலூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தத் தேர்தலில் 200 சட்டசபை தொகுதிகள் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வீயுகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதன்படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஓட்டு சாவடிகளிலும் திமுகவினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தண்டராம்பட்டு அடுத்த சே. கூடலூர் கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பிரச்சாரத்தை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் தனது சொந்த ஓட்டு சாவடி பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர் எ.வ.வேலு பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசியதாவது சே. கூடலூர் பஞ்சாயத்தில் இரண்டு ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் 249 ஓட்டு சாவடி அதிகமான ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காகவே பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 249 ஓட்டு சாவடி மையம் அதிகமான ஓட்டுகள் தான் வாங்கியுள்ளோம். இதுவரை குறைந்த ஓட்டுகள் வாங்கியதை இல்லை. வருகின்ற சட்டசபை தேர்தலில் அதிகமான ஓட்டு வேண்டுமென்றால் மக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிக்கை நாளிதழ்கள் தமிழக முதல்வரை பாராட்டுகின்றன. மக்களுக்கு தேவையான திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறார்.
இந்தியாவிலேயே காலை உணவு திட்டம் தமிழகத்தில் தான் முதல் முதலில் துவங்கப்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களில் வெளிநாடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வர் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் விநியோகம். தமிழகத்தில் விடுபட்ட குடும்ப அட்டைகாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வருகின்ற 12 ம் தேதி வழங்கப்படுகிறது.
மீண்டும் 2026-ல் தமிழக முதல்வராக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். கடந்த முறை சட்டசபை தேர்தலில் வாங்கிய ஓட்டு, லோக்சபா தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட வருகின்ற சட்டசபை தேர்தலில் 249 அதிகமான ஓட்டுகளை வாங்க வேண்டும்.
இந்த பூத் கமிட்டி கூட்டம் திருவண்ணாமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து பூக்களில் தொடர்ந்து தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 10 பஞ்சாயத்துக்களிலும் நடைபெறும்.
திருவண்ணாமலை மாநகராட்சி, யூனியன் இதைவிட தண்டராம்பட்டு யூனியனில் உள்ள 10 கிராம பஞ்சாயத்துக்கள் திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் உள்ளது.
எந்தத் தேர்தலிலும் திருவண்ணாமலை நகரத்தை விட தண்டராம்பட்டு யூனியனில் உள்ள இந்த 10 கிராம பஞ்சாயத்தில் தான் அதிக ஓட்டுகள் திமுகவிற்கு வந்துள்ளது. எனவே இந்த சட்டசபை தேர்தலிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மெய்கண்டன், பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜசேகர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராதாகிருஷ்ணன், பாண்டுரங்கன், செல்வ நராயணன் மற்றும் பூத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



