உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் இந்தியாவின் 45-வது இடமாக சாரநாத் அங்கீகாரம் பெற்றுள்ளது.
முன்னதாக, 2025–26 தேர்வுச் சுற்றுக்காக ‘பழமையான பவுத்ததலம் – சாரநாத்’ என்ற ஆவணத்தை யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
உலகின் முக்கியமான கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு, இந்தியாவின் பவுத்த பாரம்பரியத்திற்கும் தொல்லியல் முக்கியத்துவத்திற்கும் மேலும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.



