Wednesday, July 29, 2026
20 °c
Columbus
21 ° Thu
24 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி

முதல்வர் பரிசீலிப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

admin by admin
29/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

AlsoRead

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னர் பாடப்பட்டதை வரலாற்றில் முதல்முறையாக நடந்தது என்று கூறுவது தவறானது. தமிழ்த்தாய் வாழ்த்திற்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். தவெக அன்றும், இன்றும், என்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தனது நிகழ்ச்சிகளை தொடங்கும் என்றார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய்யிடம் பரிந்துரைத்துள்ளேன். இது பல்வேறு துறைகள் தொடர்புடைய விஷயம் என்பதால், அதனை முதல்வர் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்கள் இருந்தால், அரசியல் காரணங்களுக்காக அவை நிறுத்தப்பட மாட்டாது என்றும், அம்மா உணவகங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில்தான் போட்டி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கொளத்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சரிபார்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆராய்ச்சி செய்வது அவர்களது உரிமை என்றாலும், தேர்தல் தோல்விக்கான காரணத்தை வெளியில் தேடாமல், மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால், தற்போதுள்ள கட்டண நிர்ணயக் குழு மறுகட்டமைப்பு செய்யப்படும் என்றும், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Tags: அமைச்சர் ராஜ்மோகன்அரசுப் பள்ளி மாணவர்கள்சிக்கன் பிரியாணி
Previous Post

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Next Post

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

Related Posts

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்

29/07/2026

கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

29/07/2026

மேகேதாட்டு விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும்

29/07/2026

பெண்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை இல்லை:

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்
  • கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்
  • டாஸ்மாக் கடைகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி
  • கனிம வளப் பாதுகாப்பில் தவெக அரசு உறுதியான கொள்கை அறிவிப்பை வெளியிட வேண்டும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved