Thursday, July 30, 2026
37 °c
Tiruvannamalai
33 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

admin by admin
30/07/2026
in செய்திகள், தமிழ்நாடு
0
விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்த அரசு, தற்போது வரம்புடன் மட்டுமே கடன் தள்ளுபடி அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

AlsoRead

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மேலும், கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளதாகவும், இதனால் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை, உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை மானியமாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முதல்கட்ட நடவடிக்கையாகும் என்றும், அரசின் மெத்தனப்போக்கு தொடர்ந்தால் இன்னும் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags: ஆர்ப்பாட்டம்தஞ்சாவூர்தவெக அரசுமு.க.ஸ்டாலின்
Previous Post

சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம்

Next Post

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

Related Posts

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026
மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு

30/07/2026

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

30/07/2026

சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக வளாகம்

30/07/2026

சீமான் தொடர்பான அவதூறு புகார்கள்: பாரபட்சமான நடவடிக்கையை வேடிக்கை பார்க்கமாட்டோம்

29/07/2026

கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நிர்வாகி மீது தாக்குதல்

29/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜிங்க்ய ரஹானே ஓய்வு அறிவிப்பு
  • அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு
  • மேகேதாட்டு தீர்மான திருத்தத்துக்கு எதிராக அதிமுக கொறடா வழக்கு
  • டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • தங்கம் விலை மீண்டும் உயர்வு:

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved