Monday, August 17, 2026
28 °c
Tiruvannamalai
31 ° Mon
32 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

admin by admin
16/08/2026
in இந்தியா
0
குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகளை செயல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான நீதி உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “போக்சோ சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி, குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து சமூக வலைதளங்கள் கட்டாயம் புகாரளிக்க வேண்டும்.

குறிப்பாக, சிறார்களுக்கான சிறப்பு காவல் பிரிவுக்கோ அல்லது உள்ளூர் காவல் துறையினரிடமோ இதுகுறித்து புகார் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2024-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், 2 ஆண்டுகள் கடந்தும் அந்த தீர்ப்பு உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்கள் குறித்து புகார் அளிக்கத் தவறும் சமூக வலைதளங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல், கட்டாயமாக புகாரளித்தல், மின்னணு ஆதாரங்களை பாதுகாத்தல், விசாரணை முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

AlsoRead

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் கட்டுப்படுத்தவும், அவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட உள்ளது.

Tags: உச்சநீதிமன்றம்பாலியல் சுரண்டல்மத்திய அரசுவழிகாட்டு நெறிமுறை
Previous Post

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

Next Post

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

Related Posts

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026
மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு

16/08/2026

ஜார்க்கண்ட்டில் 15-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

08/08/2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
  • மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்
  • குழந்தைகள் பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை கட்டாயம் புகாரளிக்க வழிகாட்டு நெறிமுறை

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved