மக்களை தேடி செல்வதே திராவிட மாடல் ஆட்சி, என்று தென் மகாதேவமங்கலத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பேசுகையில், பெ.சு.தி.சரவணன் எம்.எல். ஏ. கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, தென்மகாதேவமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) அண்ணாமலை வரவேற்றார்.
முகாமில் பெ.ச.தி.சரவணன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசுகையில்,
தமிழ்நாடு முதல்வர் மக்களை தேடி, ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். இதுவே திராவிட மாடல் ஆட்சி ஆகும். அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து, பொதுமக்களின் மனுக்களை பெற்று, அம்மனு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
முகாமில், மகளிர் குழுவினருக்கு நிதிஉதவி, பட்டா பெயர் மாற்றம், போன்ற நலதிட்ட உதவிகளை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
உதவி திட்ட அலுவலர் மகாலட்சுமி, அரசு துறை உயர் அதிகாரிகள், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் பிச்சாண்டி, ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியாக வட்டாச்சியர் ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.