Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வெலிங்டன் ஏரியில் வீணாகும் தண்ணீர்.. பொதுப்பணித்துறை அலட்சியம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
30/01/2025
in தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
வெலிங்டன் ஏரியில் வீணாகும் தண்ணீர்.. பொதுப்பணித்துறை அலட்சியம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பொதுப்பணித்துறை அலட்சியத்தால் வெலிங்டன் ஏரியின் கடைக்கால் மதுகுகளில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்தில் இருந்துகடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இன்று வரை கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை.

கால்வாய்களில் உள்ள அடைப்புகள், தடுப்புகள் ஆகியவைகளே இதற்கு காரணம். அதே நேரத்தில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை விட அதிக அளவில் ஏரியில் இருந்து வடிகால் பகுதியில் உள்ள மதகுகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

இதனை மணல் மூட்டைகள், சாக்குகள் கொண்டு அடைத்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்க வேண்டும். செய்யவேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகளோ பொறுப்பற்ற முறையில் இருந்து வருகின்றனர். மேலும் பிரதான பாசன வாய்க்காலில் ஏரியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கால்வாயின் வட பகுதியில் பாசனத்திற்கு செல்லும் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தண்ணீரை கொண்டு அப்பகுதி விவசாயிகள் நெல் நடவு செய்யவில்லை. காரணம் அப்பகுதி நிலங்களில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி போன்ற வேளாண்மை பயிர்கள் தற்போது அறுவடை நிலையில் உள்ளதால், தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தவில்லை. அந்த தண்ணீர் அப்படியே ஏரியின் வடிகால் ஓடைக்கு செல்கிறது.

இந்த தண்ணீர் யாருக்கும் பயன்பாடு இல்லாமல் விரயமாகி வருகிறது. அதே நேரத்தில் வெயில் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிதண்ணீருக்காக மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறை, மறுபக்கம் மழை கொடுத்த வரம் விரயமாகி வருகிறது.

எனவே வெலிங்டன் ஏரி தண்ணீரை விரயமாக்காமல் பாதுகாப்பான முறையில் விவசாயம் செய்ய பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tamil newsTittakudi Newsவெலிங்டன் ஏரி
Previous Post

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Next Post

மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் தொடங்கி வைப்பு

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு: புதிய விலை நிலவரம் மற்றும் முழு விவரங்கள்!
  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved