Sunday, June 1, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/01/2025
in தமிழ்நாடு
0
நாளை முதல் ஆட்டோ கட்டணங்கள் உயர்வு..? அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், ஆட்டோக்களுக்கு நாளை முதல் தாங்கள் உயர்த்தி அறிவித்த கட்டணத்தை வசூலிப்போம் என்று ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு அரசு சார்பில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தியமைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கும்படி கடந்த 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே கட்டணத்தை மாற்றியமைத்துள்ளனர். நாளை (பிப்ரவரி 1ம் தேதி) முதல் ஆட்டோக்களுக்கு 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதல் கிலோ மீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிப்பதற்கு ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுளளது.

ஆனால், ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் அதனடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஜாஹீர் உசேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது,

ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் 1.8 கிலோ மீட்டருக்குள் வரும் சவாரிகளுக்கே 60 ரூபாய்க்கும் மேலாக வசூல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை ஓலா, உபர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

தங்களது கூட்டமைப்பின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர், உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் சுமூக பேச்சு நடத்தி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்படாவிட்டால் இன்று முதல் நாங்கள் அறிவித்த கட்டணத்தை வசூல் செய்வோம் என்று ஜாஹிர் உசேன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஆட்டோக்களுக்கு 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதல் கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆட்டோ கட்டண உயர்வை அமல்படுத்தக் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Tags: Auto Fares HikeTamilnadu Newsஆட்டோ கட்டணங்கள் உயர்வு
Previous Post

திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Next Post

கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- பாஜக மாநில செயலாளர்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved