Monday, May 26, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அமித்ஷா வருகை கண்டு இரட்டை இலை வழக்கை கையில் எடுத்த தேர்தல் ஆணையம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
11/04/2025
in தமிழ்நாடு
0
அமித்ஷா வருகை கண்டு இரட்டை இலை வழக்கை கையில் எடுத்த தேர்தல் ஆணையம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ள நிலையில், இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணைக்கு தேர்தல் ஆணையத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு இருபிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பாஜகவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மறுபுறம் அதிமுக, பாஜக கூட்டணிக்குள் வர ஓபிஎஸ், டிடிவி தினகரன் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதால் பாஜகவுக்கு அதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. அதிமுகவில் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நிர்மலா சீதாராமனை டெல்லியில் ஒருமுறை, சென்னையில் ஒருமுறை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இவையெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்தான் நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக முடிவு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். அவரை சந்திப்பதற்கு இபிஎஸ், ஓபிஎஸ், செங்கோட்டையன், பாமக செயல் தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் மீதான இறுதி விசாரணையை தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 15 மனுக்கள் மீதான விசாரணை, சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி நடந்து வருகிறது. இந்த வழக்குகள் முடியும் வரை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று அமித்ஷாவுடன் அதிமுக உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்களும் சந்திக்கும் நிலையில், இந்த சந்திப்புக்கும், இரட்டை இலை சின்ன விசாரணைக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசபப்டுகிறது. அட ஆமாங்க..குருவி உட்கார னம்பழம் விழுந்த கதைபோல அமித்ஷா வருகையின்போது மிகச் சரியாக இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டிக் கழித்துப் பாருங்கள், தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று புரியும்.

Tags: Amit ShahElection Commissiontwo leaves case
Previous Post

பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு; திருச்சி சிவாவிடம் ஒப்படைப்பு

Next Post

திண்டிவனத்தில் தொடர் மின் தடையால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved