ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம், ஒழுகூர் ஆகிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த திடீர் சோதனையில், ஒழுகூர் பகுதியில் ஜெயவேலு (வயது 71), வள்ளுவம்பாக்கம் பகுதியில் திருநாவுக்கரசு (35) ஆகிய இருவர் தனித்தனியே உரிய ஆங்கில மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தது தெெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த மருந்து மாத்திரைகள், ஊசி, மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



