திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் திமுக சார்பில்
“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுதிமொழி பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.
தி.மு.க மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவானந்தம், பாண்டுரங்கன், அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.ராஜ்குமார், வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரணி நகர பொறுப்பாளர் வ. மணிமாறன் வரவேற்பு உரையாற்றினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் – ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
தொடர்ந்து, சமூக நீதி கண்காணிப்புக்குழு தலைவரும், திராவிட இயக்க தமிழர் பேரவைத்தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
“தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்த்து ஒருவர் கேட்கிறார், முதலீடுகளை வாங்கச் சென்றீர்களா அல்லது முதலீடுகளை ஈர்க்கச் சென்றீர்களா என்று.
எங்களுக்கு வருத்தம் இல்லை. அவர்களுக்குத் தெரியாது. இரண்டும் தான். தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடு? 15ஆயிரம் கோடி நம்முடைய முதலமைச்சர் முதலீடுகள் ஈர்த்து வந்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை முதலீடாக கொடுத்து வந்துள்ளார். இன்றைய தலைமுறையை காப்பாற்றவும் அடுத்த தலைமுறைக்கும் விதை போட்டு வந்துள்ளோம். எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை? இதுதான் திராவிட மாடல்.
முன்னாள் ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் இப்போது பேசி இருக்கின்றார். திமுகவை வீட்டிற்கு அனுப்பும் ஆசை எங்களுக்கும் இருக்கிறது. விஜய்க்கும் இருக்கிறது. இது புதிய கூட்டணி. அறிவிக்கப்படாத கூட்டணி. புரிந்து கொள்ளுங்கள். உங்களை வீட்டிற்கு அனுப்பும் கடமை மக்களுக்கு உள்ளது.. ஏற்கனவே உங்களை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். காமராஜர், ராஜாஜி இருவரும் இருக்கும் போதே வீழ்த்த முடியாத இயக்கம் திமுக. நீங்களும் (பிஜேபி) விஜய்யும் இணைந்து விளையாட்டைத் தொடங்கலாம் தவிர வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆரணி நகர மன்றத் தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ். எஸ்.அன்பழகன், வழக்கறிஞர் சுந்தர், துரைமாமது, எஸ். மோகன், ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



