வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேத்தியும், பல்கலைக்கழக உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ்.விஸ்வநாதன் – டாக்டர் ஷரவன் கிருஷ்ணா ஆகியோரது இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
அத்துடன் திராவிடர் கழகத் தலைவர் கே.வீரமணி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் பலர் பங்கேற்றனர்.



