திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிலுள்ள அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களையும் முதல் நிலை சரிபார்க்கும் பணியைதொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் பொறியாளர்களை கொண்டு இந்தப் பணிகள் தொடங்கின.
இந்த சரிபார்ப்பு பணிகள் முடியும் வரை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தினசரி கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தேர்தல் அலுவலர்-மாவட்ட வழங்கல் அலுவலர் சதீஷ்குமார். மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) செந்தில்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) தியாகராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



