கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியநான சபையில் தைப்பூச தரிசன கொடியேற்றம் நேற்று நடந்தது பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை உடன் வந்து சன்மார்க்க கொடியை ஏற்றினர்.
இதே போல் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் வாழ்ந்த கருங்குழி, சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தர்ம சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய ஜோதி தரிசனம் காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, பின்னர் பிப்ரவரி 2-ம் தேதி காலை 5. 30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.
பிப்ரவரி 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருவறையில் வள்ளலார் சித்தி பெற்ற திருவறை தரிசனம் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக மெய் அன்பர்களின் வசதிக்காக பல்வேறு நகரங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் மற்றும் கடலூர் துறைமுகம் இருந்து குள்ளஞ்சாவடி குறிஞ்சிப்பாடி வடலூர் மந்தாரக்குப்பம் வழியாக விருத்தாசலம் வரை ரயில்கள்
இயக்கப்படுகின்றன.
இந்த ஜோதி தரிசனத்தை காண தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்து சன்மார்க்க பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.



