ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக, ஓரினச்சேர்க் கைக்கு மறுத்ததால் மர்ம உறுப்பை அறுத்து அவரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள கே.அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் சண்மு கம். அவருடைய மகன் பெரு மாள் (வயது 25). இவர், அப்ப குதியில் உள்ள ஹாலோ பிளாக் சிமெண்டு கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலை பில் கடந்த மாதம் 30-ந் தேதி இரவு வீட்டைவிட்டு பெருமாள், சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது செல்போன் எண்ணுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். மறுமுனையில் வேறொருவர் பேசினார்.
அவர். ஜவ்வாதுபட்டி பகுதி யில் பெருமாள் மயங்கி கீழே விழுந்து கிடப்பதாகவும், அவரை தூக்கி செல்லும்படியும் கூறிவிட்டுசெல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட் டார். இதையடுத்து குடும்பத் தினர் ஜவ்வாதுபட்டிக்கு சென்று பார்த்தனர். அப் பார்த்தனர். அப் போது அங்கு ஒட்டன்சத்தி ரம்-
மார்க்கம்பட்டி சாலையில் உள்ள நங்காஞ்சியாறு பாலத்தின் கீழே பெருமாள் மாமமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது ஆணுறுப்பு அறுசுப்பட்டு இருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தசம்பவம் குறித்துஇடையக்கோட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர். கொலை வழக்கை விசாரிக்க கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக் டர் புகழேந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்ததனிப்படைப்போலீசார், கொலை செய்யப்பட்ட பெருமாளுடன் ஹாலோ பிளாக் நிறுவனத்தில் வே லை பார்க்கும் மற்றொரு தொழிலாளியான ஸ்ரீதர் (20) என்ப வரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று ஸ்ரீதரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அதில் பெரு மாளை அவர் தான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட ஸ்ரீதர் போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
பெருமாளும், ஸ்ரீதரும் ஹாலோ பிளாக்நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். ஸ்ரீதர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை வழக்கமாககொண்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி ஒரு வீட்டில் வேலை இருப்பதாக கூறிபெருமாளை தனியாக அழைத்துச்சென் றுள்ளார். ஆனால் அவர் ஜவ் வாதுபட்டி நங்காஞ்சியாற் றின் கரை பகுதிக்கு அவரை அழைத்துச்சென்றார். அங்கு வைத்து பெருமாளுக்கு ஸ்ரீதர் ஓரினச்சேர்க்கை தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் அதற்குபெருமாள் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் பெருமாளை அடித்துக் கொலை செய்தார். பின்னர் அவரதுமர்ம உறுப்பை அறுத்துவிட்டார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



