திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபல்வேறு கிராமங்களில் உள்ளமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
வரலாறு காணாத வகையில் ஒட்டுமொத்தமாக பெண்களின் வாழ்வாதா ரத்தைமேம்படுத்துவதற்கான மகத்தான பணியை தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சரை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க
மாட்டார்கள் தமிழக மக்களை எவ்வளவு பெரிய பேராபத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காப்பாத்திருக்கிறார் என்றால் மகளிருக்கு கிடைக்கக்கூடிய உரிமைத் தொகையை வழங்கக்கூடிய ஆயிரம் நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை எதிரிகள் மேற்கொண்டு வந்தார்கள். யாரும் சிந்திக்காத வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூபாயை நிறுத்த வேண்டும் என யாரும் நினைத்தால் நான் ரூ 5000 கொடுப்பேன் என முதலமைச்சர் கொடுத்தார்.
அதிமுக பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் இது மகளிர் தொகை இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கக்கூடிய தொகையை முன்கூட்டியே வழங்கி இருப்பதாக கூறி வருகிறார்கள். இது முதலமைச்சர் உதவித்தொகை அல்ல மகளிர்க்கான உரிமைத் தொகை என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தை யும் ஏற்படுத்துகிறது. தமிழக மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திறம்பட பணியாற்றி வருகிறார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.



