திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் அழகுதிருநாவுக்கரசுவெண்கலச் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பேசியதாவது:-
நம்முடைய திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே எடுத்து காட்ட கூடிய அரசாக இருக்கிறது தலைவர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதலமைச்சராக போட்ட முதல் கையெழுத்து மகளிர் உங்களுக்கான கையெழுத்து தான் மகளிர் விடியல் பயணத் திட்டம் தேர்தல் அறிக்னகயில் சொன்ன வாக்குறுதி இந்த நாலு வருஷம் ஒன்பது மாதங்களில் எத்தனை கோடி பயன்கள் தெரியுமா? 960 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைக்கு காலையில் சமைக்கிறது கஷ்டம். அதை உணர்ந்து முதலமைச்சராக அறிமுகப்படுத்தியது தான் முதலமைச்சர் காலை உணவு திட்டம், இன்றைக்கு ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் அரசுபள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.
பெண்குழந்தைகள் உயற்கல்வி படிக்கணும் பள்ளிக்கூடம் வந்தா பத்தாது. அரசு பள்ளியில் படித்து நீ எந்த கல்லூரியில் போய் சேர்ந்தாலும் உங்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் தரேன்னு நம்ம புதுமைப்பெண்திட்டம் மாணவினா புதுமைப்பெண் திட்டம், மாணவர்கள்னா தமிழ்ப்புதல்வன் திட்டம் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள் எதிர்க்கட்சிகள் இதை செய்ய முடியாது. இன்னைக்கு 1கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவிதாதொகை திட்டத்தை எப்படியாவது வழங்கி வருகிறார்.
இந்த நிறுத்த வேண்டும் என பாஜக கோர்ட்டுக்கு போய் உள்ளது. தடுத்தால் மகளிருக்கு வழங்கக்கூடிய உரிமைத் தொகை மூன்று மாதத்திற்கு கொடுக்க முடியாது. எனவே தான் யாரிடமும் சொல்லாமல் மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகை மற்றும் கோடைகால் ஊக்கத்தொகை சேர்த்து ரூ 5000 ஒருகோடியே 30 லட்சம் மகளிருக்கு எல்லோருடைய வங்கி கணக்கில் 2 மணி நேரத்தில் பணம் வந்துவிட்டது. யார் கோர்ட்டுக்கு போனாலும் ஒன்னும் பண்ண முடியாதுனு தெரியும் பாஜக முயற்சி பண்ணுச்சு. அதற்கு துணையாக அடிமை அதிமுக முயற்சி பண்ணுச்சு. ஆனால் நம்ம முதல்வர் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எதிர்பாராதவிதமாக ரூ 5000 வழங்கி விட்டார். அதற்காக தமிழக முதல்வர் கையை பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு தெரியும் மீண்டும் அமையப் போறதுதான் நம்முடைய கழக தலைவர் தலைமையிலான ஆட்சிதான் அமையப்போகுது. மீண்டும் முதலமைச்சர் ஆன உடனே ஆயிரம் ரூபாய் உயர்த்தி மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 கொடுக்கிறேன்னு முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.
நம்முடைய முதலமைச்சர் மீது நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றது. மக்களுக்கு இருக்கின்றது. எனவே உங்கள் இடத்தில் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய தலைவர் முகவரி 200 படைப்போம் வரலாறு 200 பத்தாது உங்களுடைய எழுச்சி எல்லாம் பார்க்கும் பொழுது நிச்சயம் அடுத்த 50 நாட்கள் தான் இருக்கு. இன்னும் 50 நாட்களில் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது சொன்னாங்க, அனைத்து தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர். ஒரு முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் மக்களை சந்திக்க கூடிய ஒரு முதலமைச்சர். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்ற ஒரு முதலமைச்சர். ஒரு தலைவர். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ஒரு முதலமைச்சர், மீண்டும் ஏன் நம்முடைய முதலமைச்சர் வரணும்? மீண்டும் ஏன் நம்முடைய திராவிடம்? அந்த பிரச்சாரத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவருடைய சிலை முன்பு அந்த உறுதி மொழியை நாம் எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.



