Tuesday, June 17, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/12/2023
in சினிமா
0
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்.
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு

AlsoRead

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?

நடிகைகள் திரிஷா, குஷ்புவிடம் தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு, ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு, வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில், நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்தார். இதற்கு திரைப்பட பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆயோர் தங்களது கண்டனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர்அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் மன்சூர்அலிகான் மன்னிப்பு கோரினார்.

இதை நடிகை திரிஷாவும் ஏற்றுக் கொள்ளும் விதமாக தனது 3 எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தனது முழு வீடியோவை பார்க்காமல்,பொதுமக்கள் மத்தியில் உள்ள தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை வெளியிட்ட நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்தார்.

‘உண்மையில் நடிகை திரிஷா தான் மன்சூர் அலிகானிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்குத் தொடர்ந்துள்ளார்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை திரிஷா தரப்பில், ‘மான நஷ்ட ஈடு கேட்டு பேருக்கும் எதிராக ஒரே மனுவாக தாக்கல் செய்ய முடியாது. திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

அதனால் அவர் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று திரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்’ என்று வாதிடப்பட்டது. மன்சூர் அலிகான் தரப்பு வக்கீல், ‘நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக ஒரே வழக்காக தொடர முடியும் மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவையும் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யதயாராக இருக்கிறேன்’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே 3 பேரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதை அவதூறாக கருத முடியாது. பொதுவாக பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது மனித இயல்புதான். இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி பேருக்கும் எதிராக ஒரே வழக்கில் மானநஷ்ட ஈடு கேட்க முடியாது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நேரத்தை வீனடிக்கும் வகையிலும், விளம்பர
அதனால் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த அபராதத் தொகையை 2 வாரத்துக்குள் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி உத்திர விட்டுள்ளார்.

Tags: 1 லட்சம்அபராதம்சர்ச்சைதிரிஷாமன்சூர் அலிகான்
Previous Post

எருது விடும் விழா

Next Post

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

Related Posts

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

28/04/2025
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

15/04/2025

அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?

01/04/2025

எம்.ஜி.ஆருக்கு பிறகு பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மோகன்

01/04/2025

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…

28/03/2025

இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா : முதலமைச்சர்

27/03/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved