Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அன்னபூரணி’பட விவகாரம் நயன்தாரா வருத்தம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/01/2024
in சினிமா
0
அன்னபூரணி’பட விவகாரம் நயன்தாரா வருத்தம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரை அரங்குகளில் வெளியானது. அண்மையில் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

AlsoRead

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?

இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார்.

இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த இந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல் துறையில் புகார் அளித்தனர்.

நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரை அரங்குகளில் வெளியானது. அண்மையில் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணியை (நயன்தாரா) அசைவம் சாப்பிட்ட வைப்பதற்காக நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார்.

இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த இந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இப்படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து ‘அன்னபூரணி‘ படம் நீக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா அன்னபூரணி பட விவகாரம் தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது

எனது நடிப்பில் வெளியான ‛அன்னபூரணி’ படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளமாகி உள்ளது. கனத்த இதயத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
அன்னபூரணி படத்தை வெறும் வணிக நோக்கத்தோடு அல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக பார்த்தோம். இந்த படத்தின் வாயிலாக நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும், எனது குழுவுக்கும் துளியும் இல்லை.

கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒரு போதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Tags: அன்னபூரணிகாவல் துறையில் புகார்திரைப்படம்நயன்தாராவருத்தம்
Previous Post

பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவை

Next Post

சூரியின் அடுத்த படம் ‘கருடன்’

Related Posts

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

28/04/2025
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

15/04/2025

அடுத்த கமல்ஹாசன் என போற்றப்பட்டவரை தெரியுமா?

01/04/2025

எம்.ஜி.ஆருக்கு பிறகு பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மோகன்

01/04/2025

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…

28/03/2025

இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா : முதலமைச்சர்

27/03/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved