Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வீட்டு பெண் பணியாளர்கள்: தனி கவனம் செலுத்துமா அரசு?

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
04/11/2024
in தலையங்கம்
0
தலையங்கம்

தலையங்கம்

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த செய்திகளுக்கு நடுவில் கொடூரமான ஒரு செய்தி வெளியாகி தீபாவளி கொண்டாட்டங்களை மறக்கடிக்க செய்தி இருக்கிறது அந்தச் செய்தி நம் தலைநகர் சென்னையில் வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமி தான் பணியாற்றி வந்த குடும்பத்தாரால் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

AlsoRead

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

சமுதாய தலைவர்களின் கடமை

தஞ்சாவூரை சேர்ந்த அந்த சிறுமி தனது தந்தை மரணம் அடைந்ததை தொடர்ந்து தனது ஏழைத்தாய்க்கும் பால்மணம் மாறாத தன் தம்பிக்காகவும் சொந்த ஊர் உறவுகளை விட்டு தலைநகரில் வீட்டு வேலைக்கு வந்துள்ளார் அந்த சிறுமி. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அந்த வீட்டில் ஆரம்பம் முதலே பல கொடுமைகளை சந்தித்து வந்துள்ளார் சிறுமி என்கிறது காவல்துறை விசாரணை. அதோடு சிறுமியின் முதலாளி குடும்பத்தின் நண்பர் குடும்பமும் சிறுமியை அயன் பாக்ஸில் சுடுவது, சிகரெட்டால் சுடுவது என தினம் தினம் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் அந்த அப்பாவி சிறுமி. 

சிறுமியின் உடல்களில் உள்ள காயங்களை பார்த்தால் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக தீபாவளி தினத்தில் கூட அந்த சிறுமியை சொந்த ஊருக்கு அனுப்பாமல் கொடுமை படுத்திய அந்த கொடூர குடும்பத்தினர் தீபாவளி அன்று சிறுமியை அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் சிறுமியின் உடலை வெளியே கொண்டு போய் போட வேண்டும் என பெரும் முயற்சி செய்து அது முடியாமல் போகவே சிறுமியின் உடலை குளியலறையில் போட்டு குளிக்கப் போனவள் மர்மமாக இறந்து விட்டார் என்று நாடகமாடியுள்ளனர். போலீசாரின் விசாரணையில் தான் கொடூர கொலை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவற்றுக்கெல்லாம் மேலாக அந்த சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வசதி இல்லாமல் இங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வடித்திருக்கிறார். அதன் பிறகு அந்த சிறுமியை சென்னையிலேயே அடக்கம் செய்திருக்கிறது போலீஸ். 

இந்த விவகாரம் தலைநகரை உலுக்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்கள் தலைநகரில் வீட்டு வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

இதில் பெரும்பாலானோர் பணிபுரியும் வீடுகளிலே தங்க வைக்கப்படுகின்றனர். இதில் வசதி படைத்த வீடுகளில் பணி புரியும் பெண்களுக்கு ஏற்படும் கொடூரங்கள் வெளியில் வருவதில்லை என்கின்றனர். பல பெண்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்து வரும் சம்பவங்களும் பெருகி வருவதாக கூறப்படுகிறது. பல சிறுமிகளின் எதிர்காலம் வசதி படைத்தவர்களின் இல்லத்திலன் சமையலறையிலேயே முடக்கிப் போய்விட்டது. 

ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதார பிரச்சனையையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அரசு தனிக்கவனம் செலுத்தி வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பெண்களை கண்காணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Tags: arunai thamizhதலையங்கம்
Previous Post

வேலூரில் வேன் கவிழ்ந்து விபத்து!

Next Post

2024 திருவண்ணாமலை மகா தேரோட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

Related Posts

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

மக்களை மிரட்டும் ஆன்லைன் மோசடி

13/11/2024
தலையங்கம்

அவசியம் தனிமனித ஒழுக்கம்!

08/11/2024

சமுதாய தலைவர்களின் கடமை

07/11/2024

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தியாவிற்கு சொல்லும் செய்தி!

06/11/2024

காற்றில் பறக்கும் மேடை நாகரீகம்!

05/11/2024

சமரசமில்லா அரசியல் பயணம் வேண்டும்!

26/10/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved