Tuesday, June 17, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஊழல் குறித்து பாஜக பேசலாமா?

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/12/2023
in செய்திகள், தமிழ்நாடு
0
ஊழல் குறித்து பாஜக பேசலாமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருமாவளவன் காட்டம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை என திருமாவளவன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் அரசியலை நீர்த்து போக செய்வதற்கு சனாதன சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. தொடர்ந்து பெரியாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். பெரியார் ஒரு அரசியல் கட்சிக்கோ, இயக்கத்திற்கோ சொந்தமானவர் அல்ல. ஒட்டுமொத்த விளிம்பு நிலை மக்களுக்கு சொந்தமானவர்” என்று கூறினார்.

சட்டத்தை மதிப்பதில்லை

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதேச்சதிகரமாக செயல்பட்டு வருகிறது. எதிர் கட்சிகளையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிவிட்டு மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதை உன்னிப்பாக கவனித்து வரும் மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் கூறினார்.

வாக்குச் சீட்டு முறை

நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களில் வரும் 29ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். மழை வெள்ளம் காரணமாக விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை ஜனவரி இறுதி வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளோம் என்றார்.

ஊழல் குறித்து பாஜக பேசலாமா

பொன்முடி வழக்கை சட்டப்படி எதிர்கொள்வதற்கு திமுக வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர் அமைச்சர் பொன்முடி மேல்முறையீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகி உள்ளார். சட்டப்படி உரிய தீர்ப்பை அவர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதையே இல்லை. சிஏஜி அறிக்கை மூலம் மெகா ஊழல் வெளியாகியுள்ளது. ஊழல் ஆட்சியாக ஒன்றிய அரசு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மத்திய அரசைப் பொறுத்த வரை ஆண்டு தோறும் வழக்கமாக தரக்கூடிய நிதியைத்தான் 2 தவணைகளாக 900 கோடியை விடுவித்துள்ளனர். ஆனால், நிவாரணத்திற்காக கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. ஆண்டு தோறும் வழக்கமாக தரும் நிதியை தந்துவிட்டு தாங்கள் தான் கரிசனம் உள்ளவர்கள் எனக் காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தன்னை பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுவது போன்ற தொனியை வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறார் என்று திருமாவளவன் காட்டமாக  குற்றம் சாட்டினார்.

Tags: ஊழல்திருமாவளவன்பாஜகவுக்கு தகுதி இல்லைபெரியாரின்வாக்குச் சீட்டு முறை
Previous Post

இன்றைய தேவை நிவாரணமும் உதவியுமே!

Next Post

தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved